அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

30 December, 2012

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 6



எங்கிருந்து கற்றுக்கொண்டனவோ
உன் விழிகள் வெட்கத்தினை
என்னை வெட்கப்படவைப்பதில்
மருத்துவப்பட்டம் பெற்றுவிட்டது !



வீட்டை விட்டு கிளம்பும்போது
ஐம்பது அடி இடைவெளி
ஐயர் தெரு வரும்போது
ஐந்து அடி இடைவெளி
கோவில் வாசலில்
காலணிகளை ஒன்றாக கழற்றி வைக்கின்றோம்
கடவுளே காதல் கோட்பாட்டினை
கற்று விட்டேன் நானும் !



உனது கண்ணக்குளியில்
சேமித்து வைத்திருக்கும் நமது காதலை
உனது அண்ணன் வீட்டு
மாமரத்தில் இருக்கும் தேனீக்கள் திருடி செல்ல
வரைபடம் கொண்டு ஆலோசனை செய்து வருகிறதாம் !



என்னை கண்டதும் மறைந்து நிற்கையில்
உனது வெட்கத்தின் சாரலில்
எனது இதயத்தின் பரப்பளவு நனைந்து கிடக்கிறது !



பரிணாம வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு
நமது காதல் போதுமே..நாம் எனும்
சொ(செ)ல் கொண்டு தொடங்கியது !



உனது விழிகளை பற்றி எழுவதனால்
கருவம் கொண்டு எனது பேனா
வேறெதுவும் எழுதிடாமல் பேனாவோடு
அணிசேராமல் அமைதி காக்கிறது !



காதலினை உட்கொண்டு
புன்னகைக்கும் உன் இதழ்களுக்கு
வியர்வையின் கோட்பாடு தெரியாமலிருக்கலாம்
ஆனால் தேனின் மூலக்கூறு வாய்பாடு தெரியும்போல..!



எனக்கான கவிதை வடிப்பில்
ஆழ்ந்து நீ சிந்திக்கும் போது
கவனிப்பின்றி கிடந்த காகிதங்கள்
காற்றினோடு சண்டையிட்டு
உன் முன்னால் மண்டியிட்டு கிடக்கின்றன !



எனது சொக்காப்பை நண்பனை
இரு விரல்களுக்கிடையே நிறுத்தி
ஒரு விரல் கொண்டு அழுத்தி
அழகாக கிறுக்குகிறாய் மௌனத்தினை
மற்ற ஏழு விரல்களின் அனல் கொண்ட பார்வையினை
தாங்கமுடியவில்லை பேனா மையது
விரைவு தந்தியினை அனுப்பியிருக்கிறது !



சற்று முன் இறந்த
உனது உதட்டு சொற்கள் அனைத்தினையும்
காற்று குறிப்பு எடுத்து சென்றுள்ளது
காற்றின் ஆண்டுவிழாவில்
வெளியிடப்பட இருக்கும் வரலாற்று நாவலில்
அட்டைபடம் உனக்கென ஒதுக்கப்பட்டுள்ளதாம்
சிறப்பு விருந்தினராக எனக்கும் அழைப்பு உண்டு !



ஆசையாய் உனக்கென கரையாளர் தோப்பில்
மாங்காய் திருடிவந்தேன்
பத்திரமய் அரிசி பானைக்குள் வைத்துவிட்டாய்
முறைத்து பார்த்தோம் நானும் மாங்காவும்
பாதி கடித்து நீ தருவாய் என எதிர்பார்த்திருந்தோம் !



29 December, 2012

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 5



மொட்டை மாடியில் மெழுகுவர்த்தி ஒளியில்
காதல் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும்
அமைத்து கொடுத்த மின்சார வாரியத்திற்க்கு
விழா கமிட்டியாளர்கள் சார்பாக
மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்களாமே !



கோவிலில் சர்க்கரை பொங்கள்
ஊட்டிய போது மாட்டிக்கொண்டோம்
ஊர் ஐக்கிய சங்க தலைவரிடம்
குழந்தை வேண்டி பாயாசம் போடுடா
எல்லாம் நல்லாவரும் வாழ்த்தி போனபோதுதான்
பொங்கலின் இனிப்பு தித்தித்தது..தேனாய் !



படித்துக்கொண்டே நாம் படித்த பள்ளியிலே
பகுதிநேர ஆசிரியராக பணியாற்றுவதுதான் சரிதான்
மாலையில் நான் அமர்ந்து போசும்
மர நிழலில் காற்றினோடு கவிதை பாடுகிறாயாமே
தென்றலின் அண்மைச் செய்திகுறிப்பு இது !



உனக்கான கவிதை தொகுப்புகளோடு
பல ஆயிரம் அடி உயரம் பறந்து
சில ஆயிரம் மைல் கடந்து வந்தாலும்
உனது விழியினில் எனை கண்டதும் வரும் முதல் துளிக்கு
என்னால் எதுவுமே செய்ய முடிவதில்லை அது ஏனோ !



ஓடி வந்து சுற்றி பார்த்துவிட்டு
அருகினில் அமர்ந்து எனது தோளில்
சாய்ந்து கொண்டு கேட்பாய் எப்படி இருக்க..
பதினோறு மாதங்களுக்குபின் சுவாசம் பெறுகின்றேன்
மலரே நீ உதிர்த்த சுவாசத்தினால் !



நீ கற்ற வேதியியலை
அடுக்களையில் முயற்ச்சிக்காதே
பாவம் மாமாவுக்கு
உப்பு காரம் அதிகம் ஆகாது !



நான் வாங்கி வந்த
மலர் செடிகள் எதுவுமே பூக்கவில்லை
பூவே உனை கண்டபின்
நமக்கு இங்கு இடம் இல்லையென
பூக்களின் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதாம் !



உனது சிங்கப்பல்லின்
சிநேகம் பிடிக்குமாம்
எனது வீட்டில் காய்த்த கொய்யாப்பழத்திற்க்கு !



உனக்காய் நான் வாங்கிய
கண்ணாடி வளையல்களை
ஆசையோடு அத்தைமகள் கேட்கிறாள் என
அம்மாவோடு அத்தையும் வாங்கி கொடுக்க
வாங்கியதோடு கை முழுவதும்
அடுக்கிவைத்து ஆட்டிகாட்டிட
அருள் கந்தனுக்கு வந்ததோ இல்லையோ
தாவணி கட்டிய கன்னி தமிழச்சிக்கு வந்தது !



அத்தை மகளுக்கு கொடுத்த வளையயெல்லாம்
கூட்டத்தில் உடைந்து விட்டாதாம்
உனது கோபம் உன்னுடைய தங்கை வடிவில்
அவதாரம் எடுப்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை !



28 December, 2012

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 4



உனது வீட்டில் மட்டுமேன்
செல்லப்பிராணிகளே இல்லை என்றேன்
செல்லமே உன்னை தவிர யாரும் இல்லை
என்னோடு மௌனமாய் பேசிட என்கிறாய் !



நூலகத்தில் புத்தகம் எல்லாம்
வெளிநடப்பு செய்துவிட்டனவாம்
எனை கண்ட ஆவலில்
உனை நீ மறந்திருக்க
பாவம் புத்தகம் என்ன செய்யும் !



இப்போதும் குளத்துக்கரையில்
மிதிவண்டியில் முன் கம்பியில்
என்னோடு அமர்ந்து வருபவள்
நீயாக மட்டும்தான் இருக்கும் !



காதலிப்பவர்கள்
கடற்கரை செல்வது அழகு என்கிறார்கள்
தண்ணீரே இல்லாவிட்டாலும்
குளந்தங்கரைதானடி அழகே அழகு நமக்கு !



தலை நிறைய மல்லிகை வேண்டும் என்றாய்
வாங்கி வந்தேன் யாருக்கும் தெரியாமல்
உனது கையால் அல்ல
அத்தையின் அரவனைக்கும் கைகளால் என்கிறாய்
பூக்களும் உன் மீது காதல் கொள்ளும் பூவே !



திருவிழாவிற்க்கு வாங்கி தந்த
பலூனில் காற்று வெள்யேறாமல் இருக்க
... 144 தடைச்சட்டம் போட்டிருக்கிறாயாமே !
உனது சுவாசத்தில் தானே
நானே வாழ்கின்றேன் பாவம்
பலூனை விடுதலை செய்ய அனுமதிக்கொடு



ஊருக்கு வந்த ஆறாம் நாள்
சோகத்தின் உச்சியில் உனது முகம்
கடல் கடக்க இருபத்திநான்கு நாட்கள்
மட்டுமே என்றெண்ணி..
உன்னோடு இருபத்திநான்கு மணி நேரமாவது
வாழ ஓடிக்கொண்டிருக்கின்றேன்
நாடு விட்டு நாடு..கடல் தாண்டி !



ஏழு நாட்களும் இரவனில் வரும் சப்ரத்திற்க்கு
நமது தெருவில் எழுந்து வணங்குவது
நமது பாட்டிகளும் நாமும்தான்
பக்தி முத்துவது இதுதான் போல !



தீபாவளிக்கு வழக்கமே இல்லாமல்
நாம் வேட்டி சேலை கட்டியது
பூக்கள் தொடுத்து
பார்பானை அழைக்க
அனைத்து இளைஞர் சங்கமும் அழைப்பு விடுத்துள்ளன !



மருமகனே !
நாளைக்கு நூறுமுறை அழைக்கும்
தந்தையிடம் சொல் சீதனமாக
உனக்கு ஊட்டிய பால் சங்கு வேண்டுமென்று !



27 December, 2012

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 3



அனைத்துவகை மிட்டாய்களையும்
ஊருக்கே வாங்கி வருகிறேன்
எனக்காய் உள்ளங்கையில் ஒளித்து வைத்திருக்கும்
ஆரஞ்சுமிட்டாய் போதும் எனக்கு !



நீ துணி காயப்போட வரும் நேரத்திற்க்காக
நான் பசுமை புரட்சியாளனாக மாறிவிட்டேன்
மச்சு முழுவதும் உன் அழகை மெச்சும்
செடிகள் வளர்கின்றேன் !



அடுத்து என்ன பட்டம் வேண்டி
படிக்க போகிறாய் என்றேன்
மாலை அணிவித்து நீ தரும்
திருமதி பட்டம் என்றாய்
நானும் வெட்கம் கொண்ட நேரமது !



அம்மா வைக்கும் புளிக்குழம்பு போல
உன் விரலில் வரிசையாய் மாட்டி தின்னும்
அப்பளப்பூவும் எனக்கு பிடித்த உணவாய்போனது !



ஐந்து வயதில் ஆலமரத்தில்
ஊஞ்சல் கட்டியது நினைவிருக்கிறது என்றேன்
அவசரப்படாதே தொட்டில் கட்ட
மாதங்கள் உண்டு தள்ளியே இரு என்கிறாய் !



தேர்வுக்கு முதல் நாள் அம்மாவிடம்
ஆசி வாங்க வருவாய்
எல்லாவற்றிலும் நீ தேர்ச்சி பெறுவாய்
அம்மா வேறெதுவும் அர்த்தமின்றி
உன்னை வாழ்த்துவதுண்டு !
நீ படிக்க பணம் தடையானது
அவள் படிக்க நீ தடையாகி விடக்கூடாதென்று
என்னோடு கோபத்தில் கூறுவதாய்
முகபாவனை செய்வதுண்டு
என்னதான் இருந்தாலும் அம்மா அம்மாதான் !



தேர்வு எழுதுகிறோம்
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நீயும்
வருடத்திற்க்கு ஒருமுறை நானும் !
நீ வெற்றி பெறுவது ஊரறிந்த உண்மை
நான் வெற்றி பெறுவது உன் தந்தைக்கு
மட்டுமே தெரிந்த உண்மை !



எத்தனை தீபாவளிதான்
தாவணியில் தரிசிக்க என்பேன்
நாளையே மாலையிடு
பொங்களுக்கு பட்டுகட்டி
காட்சி தருகிறேன் என்கிறாய்
தாவணி தேவதை சேலைகட்டி
என் முற்றத்தில் பொங்கலிட
உனக்கு போட்டியாய் என்னை துரத்தியவர்கள்
பெரும் மூச்சுவிட கண் விழிக்கும் கதிரவன்
என்னோடு கண் சிமிட்டுகிறான்
நேற்றைய கனவது..!



நான் வாங்கிவரும் சேலையினை
கட்டிவிட்டு திரும்ப தருகிறாய்
முத்தங்களை மட்டும்
வீட்டுக்கு எடுத்துச் செல்கிறாய் !



முப்பதே நாட்களில் காதல்மொழி பேசலாம்
எனது விடுமுறை குறித்து
ஊர் தண்ணீர் தொட்டியில்
நண்பன் எழுதிய வாசகம் !



26 December, 2012

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 2





அடுத்த வாரம் மாமன் மகன்
வருவதாக பொய் கூறுவாய்
கடந்த வாரம் அத்தைமகள் வந்தால்
என்ற உண்மையை வரவழைக்க !



ராட்டினத்தில்
உன்னோடு சுற்றியபின்புதான்
புவியியல் புரிந்தது
பூமி கோளம் என்று !



திருவிழா பட்டாசு வெடிக்கும் நேரத்தில்
என் பின்னே ஒளிந்து கொள்வாய்
பயல் அல்ல...
பட்டாசு அனைத்தும் உனை கண்டுபின்
பதத்துவிடும் என்பதனால்தான் !



தேர் வடம் பிடித்து இழுக்க
தம்பதியினரை அழைக்கும்போது
முந்தி சென்று வடம் பிடித்தது நாமாகத்தான் இருக்கும்
மஞ்சள் கயிறு கட்டும் முன்னே தம்பதியரானோம் !



வீட்டருகே தேர் வந்தால்
அடுத்து வந்து நின்று கொள்வாய்
முதலில் குடும்ப புகைப்படத்திலும்
அடுத்ததாய் குடும்பத்திலும்
இடம் பெறும் குறிப்பு அறிந்து !



நான் ஊருக்கு வருவதை
வானவில்லின் வர்ணமாகிய
உன் வீட்டு கோலம் சொல்லுமடி ஊருக்கு !



நீ புள்ளி வைப்பது என்னவோ
உன் வீட்டு முற்றத்தில்தான்
கோலமிடுவதோ என்வீட்டு
துளசி மாடத்தில்தான் !



நீ பாதி நான் பாதி
கடித்து துப்பிய வேப்பம்பழம்
அழகாய் வளர்ந்து மஞ்சளுடுத்தி
ஊருக்கே காவல் தெய்வமாகிபோனது !



அமீரகத்திலிருந்தும்
கண்ணாடி வலையல் கேட்கும்
தேவதை நீ மட்டும்தானடி !



மொட்டைமாடியில் படுத்துகொண்டு
விமானத்திடம் நீ சொல்லும் சேதி அனைத்தும்
பத்திரமாய் குறித்து வைத்திருக்கிறேன் !



25 December, 2012

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 1





விடல் சிதறல் தேங்காவும்
வித்தியாசமாக பார்க்கின்றன
என் நெற்றில் திருநிறு இட்டு
கைகள் கண்கள் மூடி
உன் சுவாசத்தின் சுழற்சி முறைக்கு பின்பு !



நீ கண்கள் மூடி வேண்டும் வேளையில்தான்
கற்சிலைகள் அனைத்தும் கண்கள் திறந்து
வேண்டுதல் ஏற்கின்றன !



எல்லோருக்கும் கையில் பிரசாதம்
உனக்கு மட்டும் காகிதத்தில்
உதிரம் கொண்டு உதிர்த்த மடலது !



அடிமேல் அடிவைத்து
பாதம் நகர்த்தி வேண்டுதலின் போது
எறும்புகள் பாதையில் சிவப்பு விளக்கிட்டு
சிறப்பு தரிசனம் வேண்டுகிறது !



வாரத்தின் ஏழும் வெள்ளியாகி விடக்கூடாதா
என் குலச்சாமியே !
உன்னை கோவிலில் தரிசிக்க



நீ சனீஸ்வரனை வேண்டும் போது
உனது அண்ணனும்
விநாயகனை வேண்டும் போது
எனது அண்ணனும்
நினைவுக்கு வருவதாக கூறும்போது
கோபம் கொள்வாய்
நான் இரண்டாவது அத்யாயம் தொடங்கிவிடுவேன் என்று



தீபத்தினை தொட்டு மூன்று முறை
கண்களில் ஒத்திக்கொள்கிறாய்
என்னோடு நடக்கும்போது மட்டும்
மூன்று அடி இடம் பெயருகிறாய் !



நீ கட்டி எடுத்து வரும்
மாலைக்காகதான் காத்திருக்கிறோம்
நானும் கடவுளும் !



அவ்வப்போது அண்ணனோடு
அருள்தரும் வேளையில்
கட்டைவிரல் திரும்பி நின்று
மணலில் புதைந்து கொள்கிறது
காவலனை கண்ட கள்வனை போல
பின்னே...
மகாலெட்சுமியை கடத்த வந்தால்
கையில் எடுத்தா கொடுப்பார்கள்
என்கிறாள் உன் தங்கை !



உன்னைவிட உன் தங்கையே அழகு என்பேன்
அப்போ அவளையோ கட்டிக்கோ
என்று முகம் சுழிப்பாய்
முகம் மாற்ற முயலுவதாய்
மீண்டும் கோபமுறச் செய்வேன்
அவளையும் சேர்த்து கட்டிகொள்வதாய் கூறி !



21 December, 2012

முதல் முத்தம்


(இதழ்களின் சொற்பொழிவு)



சந்திரன் நாணம் கொள்ள
சூரியன் சாட்சி சொல்ல
தென்றலோ !
சானம் கலக்கி வாசல் தெளித்திட
சிட்டுக்குருவிகள் !
புள்ளி வைத்து கோலமிட
சத்தமில்லாமல் சறுக்கிடாமல்
சற்றே பின் வந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
கலைந்து கிடந்த கூந்தலினை விலக்கி
காதோரம் ஈரம் பட்ட விரல்களின் வரைவு
தென்றலின் ஈரமும்
சுவாசத்தின் வெப்பமும் கலந்திட
இட கை கோர்த்து
இடை சேர்த்து வல கை அள்ளிட
கால் விரல்கள் வெட்கத்தில் தலைகுனிந்திட
விழிகளோ இதழ்களோ
பேச அனுமதிக்கவில்லை
பேசவும் தயாராக இல்லை
நெற்றி சங்கமிக்க
புருவங்கள் புன்னகையிட
பருவமது ஆணையிடாமலே அணைத்தபடி
பருகியதடி இதழ்கள்…
இதழ்களை…இதழ்களினால்..!
அமுதம் தானோ.. அமுதமே தானோ..!
மீறிடாத வறைமுறைக்குள்
மானிடனாய்
மன்மதனாய்
மணிகண்டனாய்
மணித்துளிகளில்
தேன் இதழ்களின் தேவாமிர்தம்
காற்றினை மென்ற
இதழ்கள் பேசியதுதான் “முத்தமோ”
முத்தமே….
இது இதழ்களின் சொற்பொழிவு…!

20 December, 2012

மலரே !

நீ தேடும் வண்டு நானாக இருக்கலாம்
ஆனால் மலர் தேடும் படையெடுப்பில்
இல்லை எனது பயணம் !

01 September, 2012

மீண்டும் ஐந்து விரல்களுடன்

மௌன விழிகளோடு
மையம் கொண்ட
கவிதை மொழிகளோடு
செவி சாய்க்கிறேன்!

மொழிப் பெயர்பாளன்
உன் விழி பேசும் மொழிக்கு!

தற்சமயம் என்ன மௌன விரதமா..!

வலக்கையின் ஆறாம்
விரலில் இருந்து ஒலிக்கும்
கேள்வி இது..!

மௌனம் களைய
கவன ஈர்ப்புத் தீர்மானமொன்று
தமிழ் விடுக்க வேண்டுமென்றே

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
நிராகரித்துவிட்டேன் உன்னையும்!

மனதிற்க்கும் கோடைக்காலமா
சில காலம் நண்பனை
சொக்காப்பையதனில்
இருப்பிடம் சேர்க்கிறேன்
மீண்டும் ஐந்து விரல்களுடன்....


31 August, 2012

களவாடிய கவிதைகள்

இதயத்திலிருந்து
இதயத்திற்க்காக !

இமயமலை அடிவாரத்தில்
அதன் இருப்பிடமது...

இலக்கணத்தோடு
காதலின் இலக்கணத்தோடு
இதயத்தில் இடம் கொண்ட இதயமது...!

நாளங்கள்
இரத்த நாளங்கள்
நாணம் கொள்ளும்
இவளால் ஆன கவிதைகளால்..!

துடிப்பும்
இதய துடிப்பும்
உயிர் பெறும்
இவளால் ஆன கவிதைகளால்..!

விழிகளும்
மௌன விழிகளும்
இரவினில் முகாமிடும்
இவளால் ஆன கவிதைகளால்..!

அறைகளும்
இதயத்தின் அறைகளும்
இடம் மாறும்
இவளால் ஆன கவிதைகளால்..!

கோபமும்
என் மீதுள்ள கோபமும்
கானல் நீராய் போகும்
இவள் மீது
இவளின் மீது
நான் கொண்ட என் இந்த கவிதையினால்.....


30 August, 2012

நிழலா! நிஜமா!

நிழலா; நிஜமா
பொய்யோ; மெய்யோ

என் மெய் உயிர் தீண்டியவள்
விழிகளின் மொழிகளினால் !

காதல் இப்படித்தானோ !

கானல் நீரில்
தாகம் தணியவில்லை
நானல் கொண்டு
நாவின் நலம் பேணினாய் !

உயிர் தந்தவர்கள்
உன்னை உருக
உள்ளத்தில் ஊற்றி
மாலை வேளையில்
மணி ஓசை தீபம் ஏற்றி
அன்னமிட
அடுக்களையில் அமர்ந்து
அடுக்கடுக்கான
கற்பனைகளோடு

உம்!
வார்த்தையொன்று வந்தால்
வரிந்துகட்டி வாழ்க்கைப்பாடம்
வழக்கில்லாமல் வாய் நிறைய
வாழ்த்துக்களோடு !

இருந்தும் என் நிழல் இன்னும்
உன் நிஜத்தினை மெய்யென்று
எண்ண என்னை மடகு போட்டு
மனதின் ஓரம் மல்லுக்கட்டி
மாதக்கணக்காய் மருவுகிறது !

உன்னோடே கேட்கிறேன்
நீ...
நிஜமா...
நிழலா..!

29 August, 2012

வாழ்க்கை

மிகை குறியிட்டு
முடிக்கும் கேள்வி
வாழ்க்கை !

உயிர் தங்கி இருக்கும் உடல்
எத்தனையோ எண்ணங்கள்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
நினைவுகள் மட்டும் எஞ்சி !

“நல்லதே செய்
நல்லதே நினை”
சாதரணமாக வாழலாம்
ஆனால்...
ஆடி அடங்கி
சொந்தங்கள் விழிநோக்கி இருக்க
விடை பெறுகிறோம் !
இடையிலே...
குழந்தை குடும்பம் சமூகமென்று
நாகரீக வழி தொடர்ந்து
நற்பெயர்க்கு முற்படுவதே
வாழ்க்கையா..!

ஏதோ ஒன்று இருக்க அறியாமலே
அடங்கிவிடுகிறது கூடு !

தெரியாமலே நகர்கிறது வாழ்க்கை!

சாதாரண நிகழ்வின்றி
ஜென்மத்தின் வாய்ப்பன்றோ !
நொடிகள் தடையில்லாது
இடைவிடாது சிந்தித்தால்
நிகழ்கால அவசியம் என்றறிந்தது
எதிர்காலத்தில் வெறுமனே தோன்றும்
நிரந்தரமேது நமக்கு !

மூச்சின் எண்ணங்கள்
பெரியதென்று பொருள் உணர்த்துகிறதா !
எத்தனை கோபமும் வெறுப்பும் காழ்புணர்வும்
அதை ஒத்தே சக்தி விரயம்
நாள்காட்டி சுட்டி காட்டிய குறிப்பு
“அவசரப்படுவது ஈக்களை
அடிக்க அனுமதித்தெடுமன்று”

மனம் பெறும் மகிழ்ச்சி
மாசடைந்துவிட்டது
முயற்சிகள் தினமும்
முயற்சிக்க முற்ப்படுவதே இல்லை

முகமூடி களைந்து
ஆசுவாசப்படுத்திக்கொள்
குன்றின் மீதேறிப்பார்
குளமும் குட்டையாகும்
குறிப்புகள் எடுத்துக்கொள்
அடிவாரம் அடைந்தவுடன்
பாதையை பக்குவப்படுத்து
வாழ்ந்திட வாழ்க்கையை
வாழ்த்திட வாழ்க்கையில்
வளமும் நலமாய் வந்து சேரும்..!


28 August, 2012

என் அவள் ! என்ன அவள் ! என்னவள் !

வாட்டிய வெயிலுக்கு பின்
தென்றலின் உச்சமாய் வீசிய
மழைத்துளியின் சில துளிகள்....

அவள்...
அவளா...
அவளால்...!

மையல் விழிகளில்
மையிட்டுருப்பாளோ !

சுருள் முடியின்
சுற்றளவு சொல்வாளோ !

நொடிகளில் லட்சம் மொழிகள்
விழிகளில் சொல்வாளோ !

அனைத்துவகை பூக்களின் மாநாட்டில்
தேசிய மலராக அறிவிக்கப்பட்டவளோ !

புத்தகத்தின் மத்தியபிரதேசத்தில்
அரிசி போட்டு மயில்தோகை வளர்பவளோ !

பௌர்ணமி நிலவையும்
வெட்கம் கொள்ள செய்பவளோ !

நடைவண்டி ஓட்டிருப்பாளா !

கண்ணாடி வளையல் மீது
கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருபவளோ !

இடது கை பழக்கம் கொண்டவளோ !

நாடி துடிப்பில்
நாட்டின் மீது பற்று கொண்டவளோ !

படிப்பில்
பட்டம் பெற்றிருப்பாளோ !

பூவானவல்
பூச்செடிகளை வளர்பவளோ !

விழியில்
புன்னகை செய்பவளோ !

மொழிகள்
நூறு கற்றவளோ !

அன்பின்
இலக்கண மொழியாளோ !

பாட்டி மருத்துவம் படித்தவளோ !

ஆவி பறக்க
அசைவம் உண்பவளோ !

விழிகளில்
தூறல் செய்பவளோ !

வெள்ளி செவ்வாய்
கோவில் செல்பவளோ !
ஆடு மாடு கோழி கூட
அரவணைத்து நடப்பவளோ !

கோபத்தில்
கொள்ளை பிரியம் கொண்டவளோ !

மருமகள்
மகளாக வருவாளோ !

தலைகோதி
தாலாட்டு சொல்வாளோ !

மடி சாய்த்து மனதின்
மலைபாரம் குறைப்பவளோ !

அரும்பிய மீசையினால்
ஆன்மாவை ஆள்பவளோ !

பாவையினர் பூச்சூடும்போது
என்னை அள்ளி சூடுபவளோ !

மொட்டை மாடியில் கூழ்வடகம்
குனிந்து ஊற்றுபவளோ !

அதிசயமாகி போன
அடுக்களை சமையல் செய்பவளோ !

அதிகாலை சூரியனுக்கு
காட்சி தருபவளோ !

அச்சத்தில்
அத்தானை கட்டிக் கொள்பவளோ !

சந்தேகத்தை
சாக்கு பையில் கசக்கி இட்டவளோ !

வாசல் வந்து விழியால் செய்தி சொல்லி
வழியனுப்புவாளோ !

என் தோள் சாய்ந்து
சொர்க்கம் காண்பாளோ !

காக்கைக்கும்
கல்லில்லா சோறு படைப்பாளோ !

மல்லிகைக்கும் மஞ்சளுக்கும்
சொந்தகாரி இவள்தானோ !

பைங்கிளி தமிழில்
என் கவிக்கு உயிர் தருபவளோ !

அன்னப்பறவை அசந்து போக
குழந்தைக்கு பால் தருபவளோ !

மொத்தத்தில் சத்தமில்லா
ஒரு முத்தத்தில்
என் இதயம் வந்தடைவாளோ !

மழை நின்றது !

27 August, 2012

வெட்கத்தில் சூரியன்!

அதிகாலைச் சூரியனும்
அழகு சாதனங்களுக்கு அடிமையாகிவிட்டான்
நீ
கோலமிடும் நேரத்திற்க்காக..!

26 August, 2012

காதலின் அவா!

இமைகள் மூடி
திறக்க மறக்கும் நாள் வரை
காதலை
காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும்!

25 August, 2012

மலரின் பாத யாத்திரை

என்னை போலவே
என் வீட்டு மாடிபடியும்
மயங்கி நிக்குதடி
மலரின் பாத யாத்திரைக்கு பின்..!

24 August, 2012

மறுமடியும் வேண்டாம்... மறுமடலும் வேண்டாம்....

கடந்தகாலம் காப்பீடு செய்யவில்லை
கவிதைகளாவது காப்பீடு செய்கிறேன்
உன் இதயத்தில் !

கண்களோடு கவி தொடங்கினேன்
காதலால், காதலில் அல்ல!

என் தமிழ் கவி உலகம்
தற்காலிகமான பதவி தந்துள்ளது
உனக்கு
விருப்பமா… நிரந்திரமாக !
நித்திரையில்லை நிஜமாக
நீலக்கடல் தாண்டியும் நித்தம் வந்து
தினக்கூலி கேட்கிறாள்
என் இதயம் தந்தும்!

இதயம் தொலைத்த என்னோடு
இன்பத்திற்க்கு ஏங்குவது
வேண்டாம் பெண்ணே
மறுபடியும் வேண்டாம்!
மறுமடலும் வேண்டாம்!

23 August, 2012

பிப்ரவரி 14 பிறந்தாள் எனக்கென்ன...!

விடி வெள்ளி கண்ட நாட்கள் கடந்து
விடிந்ததும் விடியாததுமாய்
வெள்ளித்திரை காண ஓர் இளைஞர் பட்டாளம் !

பால் கொள்முதல் விலையேற்ற போராட்டம்
ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்
என் நாயகனுக்கு இன்னொரு பட்டாளம்!

தண்ணீர் விலை மிஞ்சியது
தங்கத்தை!

வெண்பொங்கல் உண்டு பெருங்குறட்டை
நடுசாமத்தில் நாலாயிரம் கனவுகளாம்
பொருளாதாரம் உயர்த்த அல்ல
அவளுடைய பிறந்தநாள் பரிசு என்னவென்று!

கலப்பை தூக்கி உழ சொல்லவில்லை
உழவும் தயாரில்லை!

தினம் நூறு ரோஜாக்கள் பரிசளிக்கிறாய்
ஒரு வேளை உணவு இல்லை
இன்னும் ஆயிரம் ஆயிரம் பேருக்கு!

உன்னை குற்றம் சொல்லவில்லை
இல்லை இல்லை
உன்னையும் குற்றம் சொல்லவில்லை!

கையூட்டு தொழில் தர்மம் என்றாகிவிட்டது
நூறு லட்சமானது...இன்றோ
லட்சத்தில் கோடியானது !

நான் என்ன செய்ய முடியும் என்று கேட்காதே
ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு வழி பாதையில்
நூறு பேர் நின்று நானென்று ஒலித்தால்
நாமென்று ஒலிக்கும்
அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள் மட்டுமல்ல

ஒரு வேளை சோற்றுக்கு கூட
வழியில்லாத ஒரு மனிதன் இருக்கும் வரையில்
பிப்ரவரி 14 பிறந்தாள் எனக்கென்ன!

தினம் தினம் உரைத்துப் பார்
உனக்குள்ளும்...
நமக்கென என்றுணர்ந்தால்
நாளை பிறக்கும் நீ எதிர்நோக்கும்
பிப்ரவரி 14......!

22 August, 2012

அம்மா!

என் தமிழ் கொண்ட
அர்த்தமுள்ள ஒரு வரி கவிதை!

ஈசனும்
ஈரேழு பிறவி வேண்டுமென்பான்
ஈன்றது என் தாயாய் இருந்தால்!

ஒவ்வொரு இரவும் ஆராரோ
ஓயாமல் ஒலிக்கிறது
தாயவள் தாலாட்டியது!

தேசம் தொலைத்து
ஆயிரம் நாட்கள் அந்திசாய்ந்து விட்டது
அரபிகடலோடு!
இன்றும் தூங்காமல் ஏங்குகிறேன்
அன்னை மடிக்காக!

காதலிலும் கள்ளம் வந்தது இன்று
அன்னையின் அன்பை தவிர!

வெற்றியின் தொடர்புள்ளி
தாயே நீ மட்டும்தான்!

நிலவையும் நித்திரையின்றி
ஏங்க வைக்கும் ; நிலாச்சோறு

விரல் பிடித்து நடந்த வீதியிலே
மண் தரை மாறியேபோனது
கல் மணல் கலவை கொண்டு
கான்கிரீட்டாக!
வெற்றிக்கு வழிகாட்டும்
விரல் பிடித்து நடக்க
மறந்ததில்லை இப்போதும்!
எப்போதும்!

பக்கத்து தெருவரை
பதம் பார்த்திருக்கிறது
அடுப்பில் இட்ட மிளகாய் வத்தல்
சுற்றிப்போட்டது எனக்கு!

அன்னையளித்த ஆதி மொழி
அன்பதனை அடுக்கடுக்காக
தொடுக்க கற்றுக்கொள்
எதிர்நோக்காமல் எள்ளளவும்!

ஹிட்லரும்
அன்னை மடிக்காக ஏங்கியவன் தான்
அன்பிற்காக..!

தலைப்பாகையாக
உயிரென தமிழ் கொண்ட
ஒரு வரி கவிதை
“அம்மா”

21 August, 2012

பொத்தான் சண்டை!

எனது மடிக்கணினியில்
தொடக்கநிலை பொத்தான்களுக்கான
மூன்றாம் உலகப்போர் அரங்கேறி வருகிறது
உனது விரல்களின் வெள்ளோட்டத்திலிருந்து !

20 August, 2012

ஈரமான மடல் துளிகள்

அந்தாதியாய் வந்த மழைக்காலத்தில்
அடுத்தடுத்து நீ தந்த மடல்கள் அனைத்தும்
நீர் சொட்டிய ஓட்டைத்து வைத்திருந்தேன்
அந்தமாய் ஒரு மடலும் தந்தாய்
மஞ்சள் பூசிய அழைப்பிதழ் என்று..

ஈரமான மடல்கள் அனைத்தும்
காய்ந்துபோன இதயத்தோட்டத்தில்
மலர்களாய் பூத்திருக்கின்றன !

19 August, 2012

மறந்து விடாதே இந்த தமிழையும் ! தமிழனையும்....!

கவிதைகள் கோடி பல
வந்ததடி பெண்ணே!
வரவேற்பறை தேடி
உன் வரவினால்!

ஏனோ மௌனமது
போரின் தளபதியாக!

ஆயுதம் இல்லாமல்
ஒரு போர்
காதல்!

காதல்!
இருமனங்களின் சந்திப்பு
காதலிப்பவன்!
திருமண வாழ்வு
வென்றவன்!
மரணத்தின் வரவேற்பறை
தோற்றவன்!
உதடுகளின் களி
சுகம் தேடுபவன்!
மாற்றப்பட்டேன் நானாக
நான்!

நான்
மாற்றப்பட்டதற்கும்
மாறுபட்டதற்கும்
வழியமைத்தவள்

ஏனோ
உயிரளித்தவள்
தமிழுக்கும்! தமிழனுக்கும்!
ஆழ்கடல் தாண்டி

கடலின் ஆழம்
அறியாதவன்
உன் மௌனம் போல!

கண்ணீர் சிந்தாதே
களைந்து விடு
கவலைகளை

மறந்து விடாதே
இந்த தமிழையும்! தமிழனையும்!

18 August, 2012

காத(லால்)ல் இன்று:-

விழிகள்
விழிகளோடு..
வழிகள் மட்டும் எஞ்சி !

விழியின் மொழிகள்
விழிகளால்.!
காயங்கள்
கருப்பைக்கும்..!

வரதட்சனை புயல்
வழுவிழந்தது...!

ரெட்டை சடை
ஒற்றையாகும்..!

கைபேசிகள்
கடவுளாகின..!

எமனின்
பாசக்கயிறு..!

எதிர்வீட்டு ஜன்னலின்
தென்றல் காற்று..!

இலக்கணம் இல்லா
இலக்கிய கவிதை..!

ஆடு மேய்ப்பவனின்
ஆங்கிலம்..!

பிறந்த குழந்தையின்
முதல் புரிதல்..!
குறை மாத பிப்ரவரியில்
சுக பிரசவம்..!

கிழவன்
காகித ரோஜாவோடு..!

நடை பயணம்
ஒற்றை காலில்
மிதியடியோடு..!

காகிதத்தில்
கத்தி கப்பல்
கடலில்..!

கார்கிலில்
கண்ணீர் புகை குண்டு..!

குட்டி குரங்கின்
குல்லா கவிதை..!

17 August, 2012

என்றும் அன்புடன் பைத்தியக்காரன்!

மௌனம் களைத்த
உன் மொழிகளை மொழி பெயர்த்தது
நான் தானே; என் தமிழோடு சேர்ந்து!

கண்டிடாத....
தாவணிக்கும் கொலுசுக்கும் கூட
கோடி பல வரிகள் வார்த்ததடி
என் தமிழ்!

உன்
ஒவ்வொரு வார்த்தைகளையும்
பொன் மொழியாக அறிவித்தது
என் செம்மொழிதானே!

மொழிக்காக
வெறும் விழா மட்டுமெடுக்கும்
மடையனல்ல நான்!

மொழிகள் மற்றவற்றில்
நாட்டமில்லை என்றில்லை
தாய் மீதுள்ள அன்பு !
என் தமிழ் மீதும்!

ஏனோ உன்னால்
நீ உச்சரித்த தமிழால்
தமிழ் மீதும் பற்றாளனானேன்!

உன் மீது
என் தமிழுக்கு காதல்!
தமிழ் மீது
எனக்கு காதல்!

யார் யாரோ
பாவம் இவன்
தமிழ் பைத்தியக்காரன்
என்றபோதை விட
ஓராயிரம் எழுத்தாணி
இறங்கியதடி இதயத்தில்
தமிழ் பைத்தியக்காரன்
இவன் என்றபோது

நிஜமாகவே
நான் பைத்தியக்காரன் தான்
உன் அன்பின் மீதும்
என் தமிழ் மீதும்

என்றும் அன்புடன்
பைத்தியக்காரன் !

16 August, 2012

காதலர்கள் மாநாட்டில்!

குருதி குடித்திடும் உன் சுவாசக்காற்றின்
வெப்பத்திற்க்கு ஏங்கிடும்
என் மார்பினில் புதைந்திருக்கும்
இதய துடிப்பின் வேகம்
ஒளி மிஞ்சிடும் வேகமென
காதல் விஞ்ஞானிகள் மாநாட்டில்
ஒருமித்த கருத்துயொன்று எட்டியிருக்கிறது

15 August, 2012

அழாதே என் ராசாத்தி...

ஆத்தா களையெடுக்க போயிருக்காளோ
அய்யா ஆடு மேய்க்க போயிருக்காரோ
மாமன் மம்பட்டி பணி செய்கிறானோ
அக்கா கீரை தேடி போயிருக்காளோ
மழை பெய்த ஈரம் இன்னும் காயலையே
ராசாத்தி உன் வயிறு நிறைய
கஞ்சி வந்து இன்னும் சேரலையே !

பாவம் ஒன்னும் செய்யலையே ராசாத்தி
என் பார்வையற்ற தேசத்தில் பிறந்ததைவிட!

உனக்கொரு செய்தி சொல்ல வந்திருக்கேன்
ராசாத்தி...!
உன் செவி மட்டுமே இங்கு திறந்திருப்பதால் !

நீ தேடி வந்த
மாகாத்மா கூட கொன்றுவிட்டோம்
உன் பாதம் இங்கே படும் முன்னே !

கோவில் எல்லாம் குவிஞ்சு போச்சு
குளம் மட்டும் குட்டையா போச்சு !
மலையில கூட மரங்கள் இல்லை
தலையிலும் காகித பூக்கள் தான் !
ஆட்டு புழுக்கைய போல
அரசியல் கட்சிகள்
மக்களுக்கு வேட்டு வைக்கிறதுல
எம்.ஜி.ஆரின் எதிரி நம்பியார் போல

அகிம்சையாளன் கூட
ஆதாயம் எங்கே என்கிறான்
மொழிகளில் கலப்படம்
கட்டாயம் என்றாகிவிட்டது
நதிகளை இணைக்க நாதியில்லை
நடிகைகளை அணைக்க துடித்திடும்
நாட்டாளுபவர்கள் பலர்

நரிகளும் இங்கே காவியணிந்தபின்
ஏற்றுக்கொள்ளபடாத கடவுளும்
காணாமல் போனவர்கள் பட்டியலில்

சிறுவர் பூங்காக்கள்
சிற்றுண்டிகளாக்கப்பட்டன

குட்டி சுவற்றில் குடியிருப்போர்
எண்ணிக்கை இன்னும் இங்கே தாழவில்லை
தட்டி கேட்டோர் தளர்ந்த போக்கினால்

அகதியாய் வந்த யுவதிகளை
சகதியாய் பிளிந்து போன அதிகாரிகள் இன்னும்
ஆண்மையோடுதான் இருக்கிறார்கள்

காதல் முன்னே கள்ளம் வந்தது
காட்சி பிழைகள் ஏராளமானது

ஏட்டில் பாட்டி மருத்துவம் எழுதியென்ன
படிக்க தெர்ந்தும் படிக்காத பலர்!

செல்வியினை தட்டிகேட்டிட
கொட்டிடாத முரசு இங்கே

மனிதாபிமானமும் கற்பு இழந்துவிட்டது
கண்ணகியே வாழ்ந்திருந்தாலும்
கணவனின் சந்தேகம் சாடாமல் இருந்திருக்காது

நிழல் தேடும் பலர் இங்கே
நிழல் தர ஏனோ முன் வருவதேயில்லை

தினம் தினம் ஒரு தினம் போல
சுதந்திர தினமும் ஆயிற்றே...

முள்ளுச்செடு வளரது கண்ணே
தேசம் எட்டு திசைகளிலும்
ஆழ உழுது வித்திடுகிறேன் கண்ணே
ஆலமரமாய் வளர்ந்திடுவாயென்னி !

14 August, 2012

பசியின் சுவை!

தாத்தாவின் தவறினால்
தலைகீழாய் போன நாட்களில்
உணவுவேளையில் உண்ண வருகையில்
வாசல் அடைத்து அமீனா நிற்க்கையில்
செய்வதறியாது ஊர்பார்க்க
அழுதுகொண்டே சென்ற நேரம்
உணர்த்தியது எனக்கு
பசியின் சுவையினை !

13 August, 2012

துலாவுகின்றேன் என்னை

உன் விழித்திரை செயல்பட்டு
என் நித்திரை செயலிழந்தது !

நா கொஞ்சும் உன் தமிழை
என் செவியது கொஞ்சிகிறது !

தமிழ் இலக்கணம் மறந்து
விழி இலக்கணம் கற்றேன் !

என் கவிதையாக
வாழ்பவள் நீ!
உன்னால்
கவிஞனாக்கப்பட்டவன் நான்!

நிறைய கிறுக்கதானடி நினனத்தேன்
நித்திரையற்ற விழிகளினால்
நிதானமின்றி நிலைகுலைந்து நிற்கிறேன்!

நான் தொலைத்த நாட்களை
துலாவுகின்றேன்...
உன் விழிகளோடு !

12 August, 2012

பார் முகிலே

எழுச்சிகளும், புரட்சிகளும்
நூற்றாண்டுகளாய்
இன்றும் இரண்டாம்
பிரஜையாக

அசைவுகள் அலசப்படுகின்றன
அணிகலன்களோ ஆராயப்படுகின்றன

எழுத்துக்கள்
ஏட்டில் அன்று
கணினியில் இன்று !

புறா தூதுவிட்டோம்
மின்னஞசலில் ஒலி வேகம் மிஞ்சினோம் !

காட்டில்
பிள்ளையார் சுழியிட்டது
வீட்டிலும்
சாலை அமைக்கிறது
பயணத்தின் பாதுகாப்புகாக
பயம் வேண்டாம்
நயம் வேண்டும்

பார் முகிலே
பலவீனம் கற்றுக்கொள்
இனம் தழைக்க
வளம் செழிக்க

சலுகை அது
வாழ்க்கையல்ல !
சுயம் பேன
சுதந்திரம் வேண்டும் !

அடி மனதில் எழுதப்பட்ட
சில
எழுதப்படாத சட்டங்கள்
அழித்தொழிக்க வேண்டும்

அவள்
அவளாக வாழ
அவள் மனதில்
அவளோடான
அடிமை எண்ணம் அகற்ற வேண்டும் !

நாற்குணம் என்றும்
நற்பண்பு என்றும்
வேலிகள் போட்டுப் பெண்ணை
வீட்டுக்குள் அடைத்தோர் நாண
காக்கி உடையணிந்தும் இங்கே
நாட்டினைக் காக்கின்றார்கள்
இருந்தும்......
சீதனம் என்னும் சிறுமை இன்னும்
சீராக அழியவுமில்லை
ஆணாதிக்கமும் அடக்கு முறையும்
முற்றாக ஒழியவுமில்லை

பார் முகிலே
உனக்கு உரைக்க காரணம்
பிழை கூற இயலாது
தலை குனிந்து
நிமிர வேண்டும்
நீ..!
கல்வி கற்று
உயர்வு பெற்று நாளைய முகிலாவது
நல்ல மழை தரவேண்டி...!

11 August, 2012

என் எதிர்பார்ப்புகள் அவளிடம் - அவளோடு - அளவோடு !



கதிரவன் கண் நோக்க
கொலுசொலி வேண்டும்
வளையல்களின் பக்க வாத்தியத்தோடு..!



நாள் தழைக்க
நிலவின் தடம் வேண்டும்
நெற்றியிலே..!



காலையிலே கவிகள் வேண்டும்
பேசாத அவள்
விழிகளிரண்டில்..!


ஆயிரம் குறும்புகள் வேண்டும்
அரும்பிய அவள் மீசைக்கும்
எனக்குமிடையே..!



மாங்கல்யமிட்டு
மாலைமாற்றும் போது
கண்களில் கண்ட வெட்கம்
அவள் தாய் வீட்டுச் சீதனத்தில்
முன் வரிசையில் வேண்டும்..!


தங்கம் வெள்ளி வேண்டாம்
தமிழ் கொண்டு வா..!
தமிழன் வாழ்வு வளம் பெற..!



பொன்னகை வேண்டாமடி
புன்னகை வேண்டுமடி..!



தலையனை நண்பன் ஏங்க வேண்டும்
அவள் மடி பார்த்து..!



தினமொரு குறுஞ் சண்டை
கன்னத்தின் கிள்ளலுக்காக..!



மங்கையவள் மழலை தமிழில்
மனம் தொலைக்க வேண்டும்..!



என் இமைகள்
மூடித்திறக்க மறக்கும் நாள் வரை
காதலித்துக் கொண்டே
இருக்க வேண்டும்......!



10 August, 2012

தோழிக்கு

பற்றுதல் ஏதும்
இல்லாமல் இருந்தேன் வாழ்வில்
உன் நட்பின்
கைப்பற்றி நடக்கும் முன்பு !

எட்டி பிடிக்கும் அளவுக்கு
தொலைவில் இருந்தாலும்
தொலைபேசியின் வழியே
என் வீட்டு சமையலறை
அறிந்தவள் நீ !
உன்னோடு நான் கொண்ட
சுற்றுபயணங்கள் தான்
எத்தனை..எத்தனை !

கடும் கோடையிலும்
ரோஜா இதழ்களின் மேல்
பனித்துளி ஏனோ...!
இதுதான் உன் பிறந்தவீட்டிலிருந்து
புகுந்த வீட்டுச் சீதனமா..!

நாற்றாக நீ நடப்பட்டாலும்
களை அதன் காப்பியத்தை
எண்ணத்தாலும் எண்ணிவிடாதே..!

வரவு சொலவுகளை வரைமுறைபடுத்து
வன்முறையாக்காதே..!
வருபவன் அகிம்சையாளனாக இருக்கலாம்..!

09 August, 2012

நாட்குறிப்பின் இருப்பிடம்


எனது நாட்குறிப்பில்
உன்னை பற்றிய குறிப்புகளே இல்லை!
உனது இதயத்தின் அறைகள்
அதன் இருப்பிடம் ஆதலால்..!

08 August, 2012

இதழ் முத்தம்


ஓசையின்றி ♪ ♫ ♩ ♬
ஒரு நெடில்(நொடி) கவிதை
இதழ் கொண்டு
இதழ் தின்று !

07 August, 2012

கம்பியில்லா மின்சாரம்


விழியோடு விழி நோக்கி
இதயத்தை இயங்க செய்பவள்
நீ..!

06 August, 2012

குழந்தைகளை கொண்டாடுங்கள்

ஆதியில் ஆற்றுமணிலில் ஆரம்பித்தோம்
அடுத்ததாய் சுவடிகளில் சுவாசித்தோம்

பேசுபவர்களுக்கு மத்தியில்
வாசிக்க வாசிக்க
புத்தகமாய் போதி மரங்கள்!
இன்று புத்தகம் பொதி சுமக்கும்
புழுவாய் பிள்ளைகள் அனைத்தும்
கழுதையும் பொதி சுமக்க
கற்றது இங்கே தானோ!

கலோரி பற்றி கற்பிக்க
காலாவதியான பாடங்கள்
பெயரளவில் சத்துணவாய்
சமச்சீர் கல்வி!

புல் நுனியின் பனித்துளி பைங்கிளிகள்
பட்டாம்பூச்சி பிடிக்க தடைச்சட்டம் வந்ததோ!

மழையில் காகித கப்பல்விட
கோட்பாடுகள் கொண்டுவரப்பட்டனவோ!

கண்ணாம்பூச்சி விளையாட்டும்
கண்கள் மூடிக்கொண்டனவோ
பம்பரம்கூட விளம்பரத்தில்தான்!

விளையாட்டை பறித்துக்கொண்ட
இது என்ன விளையாட்டு!

எதிர்கால வெளிச்சத்திற்க்கொன்று
தீக்குச்சியாய் மழலைகள்

குழந்தைகள் தினம் கொண்டாடுவதை விட்டு விட்டு
குழந்தைகளை கொண்டாடுங்கள்!

05 August, 2012

மௌனம்


எனது அறையில்
நீ விட்டுச் சென்ற
முதல் பதிவு!

04 August, 2012

இதயம் உதிர்த்த இலைகள்

இமைத்திடாத உன் இதழினால்
இலையுதிர்காலம்
என் இதயத்திற்க்கும்

03 August, 2012

ஹைக்கூவான காதல்


எழுதாத கவிதை
நான்

நான் எழுதிய கவிதை
நீ

நமக்கான ஹைக்கூ
காதல்

02 August, 2012

ஈவும் மீதியும்

நான்
உன்னால் வகுக்கப்பட்டால்
ஈவு
காதலாகவும்
மீதி
மௌனமாகவும் இருக்கும்

01 August, 2012

நாட்குறிப்பு

கவிஞர்கள் கையெழுத்திட்ட
கவி புத்தகமாய்
அறையினை அழகாக்குகிறேன்

நீயோ...
உனது நாட்குறிப்பின் ஆதியில்
எனது விரல்களின் ரேகை கேட்டு
கவிதையே உன் காலச்சுவடுகளில்
கவினாக்கிவிட்டாய்...!

27 July, 2012

கருவறையில் நடக்க விரும்புகிறேன்...

நட்பில்..
நட்பால்...
நட்போடு....

துண்டு பிரசுரத்தில் கவிதை
படிக்க அலைந்த நாளொன்றில்
கவி புத்தகமொன்று
நட்பு கவிதை பகிர்ந்தது..!

எழுத்தில்...
எழுத்தால்..!

உன் குறிப்பு
புதுமையென்றும்..
உன் நட்பே
போதுமென்றும்..!

நான் தொலக்க விரும்பவில்லை
கருவறையில் நடக்க விரும்பினேன்..!

காணாமல் போனவர்கள் பட்டியலில்
நான்..! முதலிடத்தில்..
பலரது நட்பில்... நட்பால்..!

கடைகோடியிலிருந்தும்
கார்மேகங்களுக்கிடையே
கண்டு கொண்ட
நட்பு இது..!

வித்து விதைத்து
ஆ(ள)ழ விரும்பியவளே
வேரறுத்து தரிசாகி போன
இந்நிலத்தில்..
கங்கை..காவிரி
நீர் தொளித்து
கடவுள் எடுத்தாய்
ஊர் காண...!

கண்டதில்லை கண்கள்
குலுக்கி கொண்டதில்லை
கைகள்..!
ஆனாலும்..
நட்பு பாராட்டுகின்றோம்
கவி நட்பில்
கவித்துவமான நட்பில்..!

காதலால் கவினாகவில்லை
கண்களால்...
விழிகளின் மொழிகளினால்...!

என் கவிதை இரசித்தவர்கள்
இதயம் படிக்க விரும்பவில்லை
உன்னை தவிர..!

விவரமறிந்து யாருமே விழித்திடாத
மாப்பிள்ளை.....!
வித்யாசமாகதான் இருந்தது
ஆரம்பத்தில்...
மின்னஞ்சலின் ஆதியில்
இப்போது
அலங்கரிக்கவில்லையென்றால்
அடுத்தநாள் வரை
அடுக்கடுக்கான
ஆயுத எழுத்துக்களின் கேள்வி குறிகள்...!

அன்னை தவிர யாரும்
அமுது படைத்ததில்லை..
அன்பான உன் குடும்பத்துடன்
பௌர்ணமி நிலவில்
நிலாச்சோறு....!
மூன்றாம் பிடி
உருண்டை சோறு
என் கையில்...
ஒரு கடி அப்பளத்தோடு..!

அமைதியான
அந்திமாலையில்
என் வருகை பதிவுக்காக வாசலில்
காத்திருந்து பூத்த மலர்களுக்கிடையே
பகிர்ந்து கொண்ட
மொழிகள் இவையாவும்..!

இறுதியில் ஒன்றும்..

ஜென்மங்கள் நிஜமானால்...
உன் நட்பின் கருவறையில்
நான் நானாக நிலைத்திட வேண்டும்...

என்றும்...
என்றென்றும்....

20 July, 2012

புகையிலை

ஆறறிவு கொண்டவன்
ஆறாம் விரலாய் என்னும்
நான்
புதைக்கப்படும் நுரையீரலின்
இறுதி யாத்திரையின் நுழைவு வாயிலில்
உன் இதழின் துணைக்கொண்டு
நிறைவேற்றிக் காத்திருக்கிறேன்

13 July, 2012

அழகுக்கு காரணம்

பெண்:

அடுத்ததாய் இருக்கும்
அங்காடி முதல்
அமெரிக்க நிறுவனம் வரை
கிடைக்கும் அத்தனையும்
அவள்
அழகுக்கான குறிப்புகளில்...!


ஆண்:

வெட்கம் கொண்ட
அவள் விழிகள்
விழிகள் மட்டுமே..!

11 July, 2012

“சொற்பொருள் பின்வருநிலையணி”

தொலைத்துவிட்டேன் என்றிருந்தேன்
வேண்டுமென்றே தொலைந்துவிட்டாய் என்று
இந்நாள்...உன்னால் உணர்ந்து கொண்டேன்

துணிவில்லாதவன் என்று
தொலைந்து போய்விட்டாயோ...
என் கால் ஊன்ற தவித்துக் கொண்டிருந்த நேரம்
என் தோள் சாய தவிர்த்து தொலைந்து போய்விட்டாயே...

இன்று மாடி கட்டி
மகாத்மாவினை அச்சிட்ட
காகிதங்களாய் அடுக்கி வைத்திருக்கிறேன்
அடுத்து நின்று அழகு பார்க்காமல்
தொலைந்து போய்விட்டாயே...

என் இதயத்தின் துடிப்பினையும்
வறுமைக்கோட்டுக்கு கீழ்
கணக்கிலிட்டாயோ..!

இன்று முதல் சிரிக்கவும்
சிற்பங்களோடு கற்றுக்கொள்கிறேன்..

வாழ்க்கை வாழதான்
உணர்த்தி தொலைந்து போய்விட்ட
உனது இதயத்தின் வரிகளை அணிகளில்
“சொற்பொருள் பின்வருநிலையணி”

எனக் கணக்கிலிடுவதோ...!

நான்
என்றுமே நானாகவே
இருந்துவிட்டு போகிறேன்..!