03 June, 2011
நிழல்களான நினைவுகள்...!
நினைவுகளை...
நிழல்களானதை !
நினைவுபடுத்தியது...!
“எப்படி இருக்க...
call பண்ணவே இல்ல”
மாதங்கள் கடந்தவை
கவலைகளை மட்டுமே
சுமந்து சென்றன..!
சுமைகள் கொண்டு
விழிகளிரண்டிலும்
தூக்கத்தின் தாக்கம்
மறந்தே போனாயோ..!
மறந்திருப்பாய்...
மே, ஜீன் மாதங்களை
கடந்த வருடத்தின்..!
நினைவு கூறுகிறேன்...!
நித்திரையின்றி அலைவதை..!
மறக்க முடியவில்லை
விழிகளின் கனவுகளையும்...!
கண்ணீர் துளிகளையும்..!
உனக்கு !
தமிழ் படிக்க பிடிக்காது
என்பது மட்டுமே பிடித்த ஒன்று
எனக்கு !
இதயத்தின் சறுக்களினால்
இந்த கிறுக்கல்கள்...!
பேதையவள் கண்களினால்
மெய் மறந்தே போனேனடி..!
உயிர்மெய்யும்....
மெய்யாகும் பெண்ணே...!
உயிர் குடிக்கும்
விழிகளிரண்டினால்....!
காத்திருக்கிறேன்....மீண்டும் ஒரு மழைக்காலத்திற்காக...!
Subscribe to:
Posts (Atom)