அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

23 August, 2012

பிப்ரவரி 14 பிறந்தாள் எனக்கென்ன...!

விடி வெள்ளி கண்ட நாட்கள் கடந்து
விடிந்ததும் விடியாததுமாய்
வெள்ளித்திரை காண ஓர் இளைஞர் பட்டாளம் !

பால் கொள்முதல் விலையேற்ற போராட்டம்
ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம்
என் நாயகனுக்கு இன்னொரு பட்டாளம்!

தண்ணீர் விலை மிஞ்சியது
தங்கத்தை!

வெண்பொங்கல் உண்டு பெருங்குறட்டை
நடுசாமத்தில் நாலாயிரம் கனவுகளாம்
பொருளாதாரம் உயர்த்த அல்ல
அவளுடைய பிறந்தநாள் பரிசு என்னவென்று!

கலப்பை தூக்கி உழ சொல்லவில்லை
உழவும் தயாரில்லை!

தினம் நூறு ரோஜாக்கள் பரிசளிக்கிறாய்
ஒரு வேளை உணவு இல்லை
இன்னும் ஆயிரம் ஆயிரம் பேருக்கு!

உன்னை குற்றம் சொல்லவில்லை
இல்லை இல்லை
உன்னையும் குற்றம் சொல்லவில்லை!

கையூட்டு தொழில் தர்மம் என்றாகிவிட்டது
நூறு லட்சமானது...இன்றோ
லட்சத்தில் கோடியானது !

நான் என்ன செய்ய முடியும் என்று கேட்காதே
ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு வழி பாதையில்
நூறு பேர் நின்று நானென்று ஒலித்தால்
நாமென்று ஒலிக்கும்
அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள் மட்டுமல்ல

ஒரு வேளை சோற்றுக்கு கூட
வழியில்லாத ஒரு மனிதன் இருக்கும் வரையில்
பிப்ரவரி 14 பிறந்தாள் எனக்கென்ன!

தினம் தினம் உரைத்துப் பார்
உனக்குள்ளும்...
நமக்கென என்றுணர்ந்தால்
நாளை பிறக்கும் நீ எதிர்நோக்கும்
பிப்ரவரி 14......!

No comments: