அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

10 August, 2012

தோழிக்கு

பற்றுதல் ஏதும்
இல்லாமல் இருந்தேன் வாழ்வில்
உன் நட்பின்
கைப்பற்றி நடக்கும் முன்பு !

எட்டி பிடிக்கும் அளவுக்கு
தொலைவில் இருந்தாலும்
தொலைபேசியின் வழியே
என் வீட்டு சமையலறை
அறிந்தவள் நீ !
உன்னோடு நான் கொண்ட
சுற்றுபயணங்கள் தான்
எத்தனை..எத்தனை !

கடும் கோடையிலும்
ரோஜா இதழ்களின் மேல்
பனித்துளி ஏனோ...!
இதுதான் உன் பிறந்தவீட்டிலிருந்து
புகுந்த வீட்டுச் சீதனமா..!

நாற்றாக நீ நடப்பட்டாலும்
களை அதன் காப்பியத்தை
எண்ணத்தாலும் எண்ணிவிடாதே..!

வரவு சொலவுகளை வரைமுறைபடுத்து
வன்முறையாக்காதே..!
வருபவன் அகிம்சையாளனாக இருக்கலாம்..!

2 comments:

Yaathoramani.blogspot.com said...

பற்றுதல் ஏதும்
இல்லாமல் இருந்தேன் வாழ்வில்
உன் நட்பின்
கைப்பற்றி நடக்கும் முன்பு !//

வார்த்தைஅக்ளை மிக மிக நேர்த்தியாகப்
பயன்படுத்துகிறீர்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

மனம் கவர்ந்த உங்களின் வாழ்த்துக்கள் என்னை வளம் பெற செய்கிறது. நன்றி