இல்லாமல் இருந்தேன் வாழ்வில்
உன் நட்பின்
கைப்பற்றி நடக்கும் முன்பு !
எட்டி பிடிக்கும் அளவுக்கு
தொலைவில் இருந்தாலும்
தொலைபேசியின் வழியே
என் வீட்டு சமையலறை
அறிந்தவள் நீ !
உன்னோடு நான் கொண்ட
சுற்றுபயணங்கள் தான்
எத்தனை..எத்தனை !
கடும் கோடையிலும்
ரோஜா இதழ்களின் மேல்
பனித்துளி ஏனோ...!
இதுதான் உன் பிறந்தவீட்டிலிருந்து
புகுந்த வீட்டுச் சீதனமா..!
நாற்றாக நீ நடப்பட்டாலும்
களை அதன் காப்பியத்தை
எண்ணத்தாலும் எண்ணிவிடாதே..!
வரவு சொலவுகளை வரைமுறைபடுத்து
வன்முறையாக்காதே..!
வருபவன் அகிம்சையாளனாக இருக்கலாம்..!
2 comments:
பற்றுதல் ஏதும்
இல்லாமல் இருந்தேன் வாழ்வில்
உன் நட்பின்
கைப்பற்றி நடக்கும் முன்பு !//
வார்த்தைஅக்ளை மிக மிக நேர்த்தியாகப்
பயன்படுத்துகிறீர்கள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மனம் கவர்ந்த உங்களின் வாழ்த்துக்கள் என்னை வளம் பெற செய்கிறது. நன்றி
Post a Comment