அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

18 August, 2012

காத(லால்)ல் இன்று:-

விழிகள்
விழிகளோடு..
வழிகள் மட்டும் எஞ்சி !

விழியின் மொழிகள்
விழிகளால்.!
காயங்கள்
கருப்பைக்கும்..!

வரதட்சனை புயல்
வழுவிழந்தது...!

ரெட்டை சடை
ஒற்றையாகும்..!

கைபேசிகள்
கடவுளாகின..!

எமனின்
பாசக்கயிறு..!

எதிர்வீட்டு ஜன்னலின்
தென்றல் காற்று..!

இலக்கணம் இல்லா
இலக்கிய கவிதை..!

ஆடு மேய்ப்பவனின்
ஆங்கிலம்..!

பிறந்த குழந்தையின்
முதல் புரிதல்..!
குறை மாத பிப்ரவரியில்
சுக பிரசவம்..!

கிழவன்
காகித ரோஜாவோடு..!

நடை பயணம்
ஒற்றை காலில்
மிதியடியோடு..!

காகிதத்தில்
கத்தி கப்பல்
கடலில்..!

கார்கிலில்
கண்ணீர் புகை குண்டு..!

குட்டி குரங்கின்
குல்லா கவிதை..!

No comments: