விழிகளோடு..
வழிகள் மட்டும் எஞ்சி !
விழியின் மொழிகள்
விழிகளால்.!
காயங்கள்
கருப்பைக்கும்..!
வரதட்சனை புயல்
வழுவிழந்தது...!
ரெட்டை சடை
ஒற்றையாகும்..!
கைபேசிகள்
கடவுளாகின..!
எமனின்
பாசக்கயிறு..!
எதிர்வீட்டு ஜன்னலின்
தென்றல் காற்று..!
இலக்கணம் இல்லா
இலக்கிய கவிதை..!
ஆடு மேய்ப்பவனின்
ஆங்கிலம்..!
பிறந்த குழந்தையின்
முதல் புரிதல்..!
குறை மாத பிப்ரவரியில்
சுக பிரசவம்..!
கிழவன்
காகித ரோஜாவோடு..!
நடை பயணம்
ஒற்றை காலில்
மிதியடியோடு..!
காகிதத்தில்
கத்தி கப்பல்
கடலில்..!
கார்கிலில்
கண்ணீர் புகை குண்டு..!
குட்டி குரங்கின்
குல்லா கவிதை..!
No comments:
Post a Comment