அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

13 August, 2012

துலாவுகின்றேன் என்னை

உன் விழித்திரை செயல்பட்டு
என் நித்திரை செயலிழந்தது !

நா கொஞ்சும் உன் தமிழை
என் செவியது கொஞ்சிகிறது !

தமிழ் இலக்கணம் மறந்து
விழி இலக்கணம் கற்றேன் !

என் கவிதையாக
வாழ்பவள் நீ!
உன்னால்
கவிஞனாக்கப்பட்டவன் நான்!

நிறைய கிறுக்கதானடி நினனத்தேன்
நித்திரையற்ற விழிகளினால்
நிதானமின்றி நிலைகுலைந்து நிற்கிறேன்!

நான் தொலைத்த நாட்களை
துலாவுகின்றேன்...
உன் விழிகளோடு !

2 comments:

Yaathoramani.blogspot.com said...

நான் தொலைத்த நாட்களை
துலாவுகின்றேன்...
உன் விழிகளோடு //

அருமை அருமை
மாறுபட்ட அருமையான சிந்தனை
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி