என் நித்திரை செயலிழந்தது !
நா கொஞ்சும் உன் தமிழை
என் செவியது கொஞ்சிகிறது !
தமிழ் இலக்கணம் மறந்து
விழி இலக்கணம் கற்றேன் !
என் கவிதையாக
வாழ்பவள் நீ!
உன்னால்
கவிஞனாக்கப்பட்டவன் நான்!
நிறைய கிறுக்கதானடி நினனத்தேன்
நித்திரையற்ற விழிகளினால்
நிதானமின்றி நிலைகுலைந்து நிற்கிறேன்!
நான் தொலைத்த நாட்களை
துலாவுகின்றேன்...
உன் விழிகளோடு !
2 comments:
நான் தொலைத்த நாட்களை
துலாவுகின்றேன்...
உன் விழிகளோடு //
அருமை அருமை
மாறுபட்ட அருமையான சிந்தனை
தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
Post a Comment