அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

31 August, 2012

களவாடிய கவிதைகள்

இதயத்திலிருந்து
இதயத்திற்க்காக !

இமயமலை அடிவாரத்தில்
அதன் இருப்பிடமது...

இலக்கணத்தோடு
காதலின் இலக்கணத்தோடு
இதயத்தில் இடம் கொண்ட இதயமது...!

நாளங்கள்
இரத்த நாளங்கள்
நாணம் கொள்ளும்
இவளால் ஆன கவிதைகளால்..!

துடிப்பும்
இதய துடிப்பும்
உயிர் பெறும்
இவளால் ஆன கவிதைகளால்..!

விழிகளும்
மௌன விழிகளும்
இரவினில் முகாமிடும்
இவளால் ஆன கவிதைகளால்..!

அறைகளும்
இதயத்தின் அறைகளும்
இடம் மாறும்
இவளால் ஆன கவிதைகளால்..!

கோபமும்
என் மீதுள்ள கோபமும்
கானல் நீராய் போகும்
இவள் மீது
இவளின் மீது
நான் கொண்ட என் இந்த கவிதையினால்.....


No comments: