அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

30 August, 2012

நிழலா! நிஜமா!

நிழலா; நிஜமா
பொய்யோ; மெய்யோ

என் மெய் உயிர் தீண்டியவள்
விழிகளின் மொழிகளினால் !

காதல் இப்படித்தானோ !

கானல் நீரில்
தாகம் தணியவில்லை
நானல் கொண்டு
நாவின் நலம் பேணினாய் !

உயிர் தந்தவர்கள்
உன்னை உருக
உள்ளத்தில் ஊற்றி
மாலை வேளையில்
மணி ஓசை தீபம் ஏற்றி
அன்னமிட
அடுக்களையில் அமர்ந்து
அடுக்கடுக்கான
கற்பனைகளோடு

உம்!
வார்த்தையொன்று வந்தால்
வரிந்துகட்டி வாழ்க்கைப்பாடம்
வழக்கில்லாமல் வாய் நிறைய
வாழ்த்துக்களோடு !

இருந்தும் என் நிழல் இன்னும்
உன் நிஜத்தினை மெய்யென்று
எண்ண என்னை மடகு போட்டு
மனதின் ஓரம் மல்லுக்கட்டி
மாதக்கணக்காய் மருவுகிறது !

உன்னோடே கேட்கிறேன்
நீ...
நிஜமா...
நிழலா..!

No comments: