பொய்யோ; மெய்யோ
என் மெய் உயிர் தீண்டியவள்
விழிகளின் மொழிகளினால் !
காதல் இப்படித்தானோ !
கானல் நீரில்
தாகம் தணியவில்லை
நானல் கொண்டு
நாவின் நலம் பேணினாய் !
உயிர் தந்தவர்கள்
உன்னை உருக
உள்ளத்தில் ஊற்றி
மாலை வேளையில்
மணி ஓசை தீபம் ஏற்றி
அன்னமிட
அடுக்களையில் அமர்ந்து
அடுக்கடுக்கான
கற்பனைகளோடு
உம்!
வார்த்தையொன்று வந்தால்
வரிந்துகட்டி வாழ்க்கைப்பாடம்
வழக்கில்லாமல் வாய் நிறைய
வாழ்த்துக்களோடு !
இருந்தும் என் நிழல் இன்னும்
உன் நிஜத்தினை மெய்யென்று
எண்ண என்னை மடகு போட்டு
மனதின் ஓரம் மல்லுக்கட்டி
மாதக்கணக்காய் மருவுகிறது !
உன்னோடே கேட்கிறேன்
நீ...
நிஜமா...
நிழலா..!
No comments:
Post a Comment