அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

29 August, 2012

வாழ்க்கை

மிகை குறியிட்டு
முடிக்கும் கேள்வி
வாழ்க்கை !

உயிர் தங்கி இருக்கும் உடல்
எத்தனையோ எண்ணங்கள்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
நினைவுகள் மட்டும் எஞ்சி !

“நல்லதே செய்
நல்லதே நினை”
சாதரணமாக வாழலாம்
ஆனால்...
ஆடி அடங்கி
சொந்தங்கள் விழிநோக்கி இருக்க
விடை பெறுகிறோம் !
இடையிலே...
குழந்தை குடும்பம் சமூகமென்று
நாகரீக வழி தொடர்ந்து
நற்பெயர்க்கு முற்படுவதே
வாழ்க்கையா..!

ஏதோ ஒன்று இருக்க அறியாமலே
அடங்கிவிடுகிறது கூடு !

தெரியாமலே நகர்கிறது வாழ்க்கை!

சாதாரண நிகழ்வின்றி
ஜென்மத்தின் வாய்ப்பன்றோ !
நொடிகள் தடையில்லாது
இடைவிடாது சிந்தித்தால்
நிகழ்கால அவசியம் என்றறிந்தது
எதிர்காலத்தில் வெறுமனே தோன்றும்
நிரந்தரமேது நமக்கு !

மூச்சின் எண்ணங்கள்
பெரியதென்று பொருள் உணர்த்துகிறதா !
எத்தனை கோபமும் வெறுப்பும் காழ்புணர்வும்
அதை ஒத்தே சக்தி விரயம்
நாள்காட்டி சுட்டி காட்டிய குறிப்பு
“அவசரப்படுவது ஈக்களை
அடிக்க அனுமதித்தெடுமன்று”

மனம் பெறும் மகிழ்ச்சி
மாசடைந்துவிட்டது
முயற்சிகள் தினமும்
முயற்சிக்க முற்ப்படுவதே இல்லை

முகமூடி களைந்து
ஆசுவாசப்படுத்திக்கொள்
குன்றின் மீதேறிப்பார்
குளமும் குட்டையாகும்
குறிப்புகள் எடுத்துக்கொள்
அடிவாரம் அடைந்தவுடன்
பாதையை பக்குவப்படுத்து
வாழ்ந்திட வாழ்க்கையை
வாழ்த்திட வாழ்க்கையில்
வளமும் நலமாய் வந்து சேரும்..!


No comments: