அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

19 August, 2012

மறந்து விடாதே இந்த தமிழையும் ! தமிழனையும்....!

கவிதைகள் கோடி பல
வந்ததடி பெண்ணே!
வரவேற்பறை தேடி
உன் வரவினால்!

ஏனோ மௌனமது
போரின் தளபதியாக!

ஆயுதம் இல்லாமல்
ஒரு போர்
காதல்!

காதல்!
இருமனங்களின் சந்திப்பு
காதலிப்பவன்!
திருமண வாழ்வு
வென்றவன்!
மரணத்தின் வரவேற்பறை
தோற்றவன்!
உதடுகளின் களி
சுகம் தேடுபவன்!
மாற்றப்பட்டேன் நானாக
நான்!

நான்
மாற்றப்பட்டதற்கும்
மாறுபட்டதற்கும்
வழியமைத்தவள்

ஏனோ
உயிரளித்தவள்
தமிழுக்கும்! தமிழனுக்கும்!
ஆழ்கடல் தாண்டி

கடலின் ஆழம்
அறியாதவன்
உன் மௌனம் போல!

கண்ணீர் சிந்தாதே
களைந்து விடு
கவலைகளை

மறந்து விடாதே
இந்த தமிழையும்! தமிழனையும்!

No comments: