அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

11 August, 2012

என் எதிர்பார்ப்புகள் அவளிடம் - அவளோடு - அளவோடு !



கதிரவன் கண் நோக்க
கொலுசொலி வேண்டும்
வளையல்களின் பக்க வாத்தியத்தோடு..!



நாள் தழைக்க
நிலவின் தடம் வேண்டும்
நெற்றியிலே..!



காலையிலே கவிகள் வேண்டும்
பேசாத அவள்
விழிகளிரண்டில்..!


ஆயிரம் குறும்புகள் வேண்டும்
அரும்பிய அவள் மீசைக்கும்
எனக்குமிடையே..!



மாங்கல்யமிட்டு
மாலைமாற்றும் போது
கண்களில் கண்ட வெட்கம்
அவள் தாய் வீட்டுச் சீதனத்தில்
முன் வரிசையில் வேண்டும்..!


தங்கம் வெள்ளி வேண்டாம்
தமிழ் கொண்டு வா..!
தமிழன் வாழ்வு வளம் பெற..!



பொன்னகை வேண்டாமடி
புன்னகை வேண்டுமடி..!



தலையனை நண்பன் ஏங்க வேண்டும்
அவள் மடி பார்த்து..!



தினமொரு குறுஞ் சண்டை
கன்னத்தின் கிள்ளலுக்காக..!



மங்கையவள் மழலை தமிழில்
மனம் தொலைக்க வேண்டும்..!



என் இமைகள்
மூடித்திறக்க மறக்கும் நாள் வரை
காதலித்துக் கொண்டே
இருக்க வேண்டும்......!



No comments: