01 January, 2011
நான் கவிஞனா......!!!!
என் கவிதையின் வரிகளுக்கு
உயிரூட்டியவளே நீதானே!
ஏனோ என் பேனாவுக்கும், தமிழுக்கும்
உன் மீதான காதல் மட்டும் இன்றும் அப்படியே!!!
துயிலும் போது என்னோடு உரைத்த
மௌனத்தையே மொழி பெயர்த்தேன்..!!
மௌனத்திற்கே இத்தனை மொழிகள் என்றால்....!
கண்ணின் கருவிழி விளக்க
ஜென்மம் ஏழு எடுத்தாலும் தீராது!!
கைப்பேசிக்கே உயிரளித்தவள் நீ!!
கள்ளன் அவன் காதோடு
முணுமுணுத்த வெட்க மொழி இது!!
தாவணியில் ஒரு கணம் பவனி வந்து பார்...!!
வீட்டின் தரைக்கும் உன் மீது காதல் வரும்..!!
உன் பேச்சுகள் அனைத்தும் தான்!
என் கவிதையின் மூச்சுகள்!!
கவிதைகள் கோடி பல எழுதலாம்
பெண்ணே பற்றி உன்னை!!!
போதாது இவ்வுலக மூங்கில் காடுகள்!!
ஆக்டோபஸின் ஜோசியமும் பொய்க்கும்
உன் விழிக் கண்டு பின் உரைத்தால்!!
மறுமுறை வாராதே சேலையில் முன்பு!
இல்லை என்னோடு இன்னோரு இதயம்!!!!!!!!!
உயிரோடு உணர்ச்சி ஒரு புறம் இருக்க
கவிஞன் இவன் என்றால் தகுமோ!!!
மௌனங்கள் உயிர்தெழுந்தால்.......!
மை தொட்ட
மையல் விழிகளோடுதான்
எத்துனை கவிதகளடி...!
முகப்பூச்சு தவிர்த்து
நீ
வெட்கம் கொண்டதால்
ஏனோ....
வரிகள் அது
மௌனங்களாகவே...!
என் மௌனங்கள்
உயிர்தெழுந்தால்..!
கைதியாயிருப்பேன் என்றோ...!
மௌனங்களுடன்......
மௌனம் கலைத்த தேவதை......!!!!
ஆயிரம் விளக்குகள்
என் திசை நோக்கி...
ஆனாலும் நிழல் இல்லா..
நிசப்தமான தேகம் பெற்றேனடி..!
பேனா மீதும் பேரன்பு..!
அமாவசையிலும் முழு நிலவு..!
தாவணி கொண்ட தமிழ் கண்டு
தரணி மொழிகளெல்லாம்
தாயகம் தவிர்க்க தயாராகிவிட்டது..!
நீ சூடி கலைந்த
மல்லிகைக்கும், மணிமகுடம்..!
மௌன பேரரசர்..!
காலனும் கவிதை வடிப்பான்
பெண்ணே ! உன் கண்களால்.!
சரித்திர காவியமாகும், என் கவிதையும்
என் காதலால்...உன்னோடு...!
Subscribe to:
Posts (Atom)