அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

26 December, 2012

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 2





அடுத்த வாரம் மாமன் மகன்
வருவதாக பொய் கூறுவாய்
கடந்த வாரம் அத்தைமகள் வந்தால்
என்ற உண்மையை வரவழைக்க !



ராட்டினத்தில்
உன்னோடு சுற்றியபின்புதான்
புவியியல் புரிந்தது
பூமி கோளம் என்று !



திருவிழா பட்டாசு வெடிக்கும் நேரத்தில்
என் பின்னே ஒளிந்து கொள்வாய்
பயல் அல்ல...
பட்டாசு அனைத்தும் உனை கண்டுபின்
பதத்துவிடும் என்பதனால்தான் !



தேர் வடம் பிடித்து இழுக்க
தம்பதியினரை அழைக்கும்போது
முந்தி சென்று வடம் பிடித்தது நாமாகத்தான் இருக்கும்
மஞ்சள் கயிறு கட்டும் முன்னே தம்பதியரானோம் !



வீட்டருகே தேர் வந்தால்
அடுத்து வந்து நின்று கொள்வாய்
முதலில் குடும்ப புகைப்படத்திலும்
அடுத்ததாய் குடும்பத்திலும்
இடம் பெறும் குறிப்பு அறிந்து !



நான் ஊருக்கு வருவதை
வானவில்லின் வர்ணமாகிய
உன் வீட்டு கோலம் சொல்லுமடி ஊருக்கு !



நீ புள்ளி வைப்பது என்னவோ
உன் வீட்டு முற்றத்தில்தான்
கோலமிடுவதோ என்வீட்டு
துளசி மாடத்தில்தான் !



நீ பாதி நான் பாதி
கடித்து துப்பிய வேப்பம்பழம்
அழகாய் வளர்ந்து மஞ்சளுடுத்தி
ஊருக்கே காவல் தெய்வமாகிபோனது !



அமீரகத்திலிருந்தும்
கண்ணாடி வலையல் கேட்கும்
தேவதை நீ மட்டும்தானடி !



மொட்டைமாடியில் படுத்துகொண்டு
விமானத்திடம் நீ சொல்லும் சேதி அனைத்தும்
பத்திரமாய் குறித்து வைத்திருக்கிறேன் !



No comments: