அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

07 June, 2013

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 10





வெண்ணிலவும் காவல் நிற்கும்
மாலையிலே நீ தலை குளித்து
மல்லிகை மொட்டு சூடி
விளக்கினிற்கு ஒளி தருகையிலே !



வியாழனில் நூற்பாலைகள் அமைத்து
விண்வெளி சுற்றுப்பயணம் செய்து
சேகரித்த விண்மீன்களை
சேலையிலே ஆங்காங்கே
ஆய்வு செய்து நட்டிருகிறேன்
பிறந்தநாள் பரிசுக்காக !



புளூட்டோவிற்கு தனிக்குடித்தனம்
போய்விடலாம் என்றேன்
அங்கே குளிர் அதிகம்
உன் குறும்புகளும் அதிகம் என்கிறாய் !



பூமியிலே நீ சுற்றி பார்க்க
பயணம் ஏதும் செய்யாததால்
மனம் உடைந்த பூமி
தன்னை தானே சுற்றி காட்டுகிறது உனக்கு !



நீ இட்ட மரமாகி விட்டதே
உன் இதயத்தில் நான் இட்ட விதையின்
முளை குறுத்து குறிப்பு அறிய வேண்டுகிறேன் !



நீ நடந்து செல்லும் இடமெங்கும்
மரக்கன்றுகள் நட்டிருகிறேன்
உன் நிழல் வாடாமல் இருக்க
நிஜமோ பஞ்சாயத்தாரின் அசோகன் நானாகி போனேன் !



உன் விழி கதிர்வீச்சினால்
என் இதயத்தில் காதல் வளரதானே செய்கிறது
பின் அணுகதிர்வீச்சுகொன்ன
இத்தனை போராட்டமோ !



மொட்டை மாடியில் உனது மடியில்
தலை வைத்து படுத்திருக்கும் போது
விரல் நீட்டி நிலவு பாரு என்கிறாய்
நிலவே நான் உனது மடியில் தானே கிடக்கிறேன் !



எனது முதுகினில் உனது முதுகினை சாய்த்து
எப்போதும் புத்தகம் படிக்கிறாய்
நான் உன் இதயம் பேசும் கவிதைகளை
எனது முதுகொலும்பில் சேர்த்து வைக்கிறேன் !



உன்னை பார்க்கும் போது
இளையராஜாவின் இசை கேட்கவில்லை
தென்றலின் தாளம்தான் கேட்கிறது
எத்தனை தாளங்களடி
உன்னை பார்க்கும் போது தென்றலுக்கு
காற்றுக்கு தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பு உறுதி !



06 June, 2013

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 9





உன்னை நினைக்காத நாளில்லை
என்பது கணிதத்தின் சரியான கூற்று இல்லை
நினைத்திடாத நாளிகை இல்லை
என்பதே சரியான தீர்வு !



நீ தேவதையும் இல்லை
அரக்கியும் இல்லை
குறிஞ்சு மலர்கள் கூடி பேசிடும்
மலரே நீயடி !



எனது கவிதைகள்
உனது விழிகளால் சலவை செய்யப்பட்டு
தினம் தினம் புதுமையாய்
நிறப்பதிவுகளை துயிலில் இருந்து எழுப்புகின்றன !



என்னை ஊருக்கு அனுப்பும் போது
விழிகள் நிரப்பும் வித்தியினை
எங்கிருந்து கற்று கொண்டனவோ உனது விழிகள்
அழாதே அழுதுவிடுவேன் நானும் !



உன்னோடு பயணம் செய்யும்போது
உன்னையே வாகனம் செலுத்த சொல்வதுண்டு
இமைக்கும் உனது விழியழகை
இமைக்காமல் பார்ப்பதற்காக !



எனது மீசைக்கும்
உனது புருவத்திற்கும் காதலாம்
உனது கண்களோடு என் இதழ்கல்
காதலை வெளிப்படுத்தியதிலிருந்து !



கற்காலம் படித்துவிட்டேன்
கண்ணகி காலமும் படித்து விட்டேன்
இப்போது கனவுகளில்
உனக்கு கணவனாகும் காலம்
பற்றிய குறிப்பு சேகரித்துக் கொண்டிருக்கின்றேன் !



நீ மஞ்சள் பூசிய நாளிலிருந்து
மற்ற கிழங்குகள் அனைத்தும்
நிறமற்ற நோய்காக மருந்து வேண்டி
மருத்துவரிடம் தஞ்சம் புகுந்துள்ளன !



மாத விளக்கு பூசையில்
மின்சாரம் தொடர்பு துண்டித்துபோக
விளக்கொளியில் ஒரு நிமிடம் திகைத்து போனேனடி
அம்மனே அமர்ந்திருப்பது போல நீ !



நான் வேட்டி கட்ட பழகி தந்தேன்
பயத்தில் எனை கட்டிக்கொள்ள
யார் பழகி தந்தார்களோ
இது அன்னிச்சை செயலென ஆய்வுகள் கருதுகின்றன !



05 June, 2013

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 8





எனது கவிதையில் ஏற்படும்
வானிலை மாற்றங்கள் அத்தனைக்கும்
உனது பெயரையே எனது பேனா முன்மொழிகின்றது !



காலையில் நீ கோவில் செல்லும் வழி
தெருக்கள் அனைத்திலும் காற்றின் முனுமுனுப்புகள்
காதோரம் களைப்பாரிட கண்டேன்
தென்றலினை தழுவி செல்லும் தென்றல் நீயென !



மொட்டுகள் பிறந்து விரிந்து
உனது கூந்தல் விட்டு விலகும் சோகத்தில் வாடி
காவி நிறம் அணிந்ததை கண்டேன்
வினவிய போது மொட்டுகள் மனம் திறக்கும் இடம்
உனது தலைமுடி என குறிப்பு கிடைத்தது !



மழித்தலில் ஆர்வம் இல்லையடி என்றேன்
உச்சி வெயிலென கூட பாராமல்
எனது கண்ணங்களை பதம் பார்த்தது
உனது அப்பாவின் முகம் துடைக்கும் கத்தி !



நீ வளையல் களையும் வேளையில்
மணிக்கட்டிடம் வேண்டுகிறது வளையல்
வழிவிடாதே என்றும்
வளைந்து கொடுக்காதே என்றும் !



முத்துமணி வைத்த காதணி அணிவது
நீயாக மட்டும்தான் இருக்கும்
எனது பெயர் கொண்ட அணிகலன்கள் அணிவதென
காதல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளாயாமே !



உனது விழிகளிரண்டும்
கவிதையாக பிறந்தவை என்பதை
மெய்ப்பிப்பது போல அவ்வப்போது
குறிப்பிட முடியாத சில அலைவரிசை எண்ணில்
எனது விழிகளோடு ஆரவாரம் செய்யும் !



பேராரவாரத்துடன் காத்திருந்தோம்
மாலை நான்கு மணி வரை
நானும் உனது வீட்டு நாய் குட்டியும்
வந்ததும் நல்ல துணையோடு காத்திருகிறாய் என்றாய்
இல்லையடி நல்ல துணைக்காக காத்திருக்கிறேன் என்றேன் !



அடுத்த தெரு அங்காடிக்கு அவசரமாய் வாவென்று
குறுஞ்செய்தியி அனுப்பியிருந்தாய்
பதபதைத்து வர ஊரெங்கும் விற்காத
உனக்கு பிடித்த தேன் மிட்டாய் இங்கு கிடைக்குமென்றாய் !



நாகரிகம் கலந்த இன்றைய சூழலிலும்
என்னை பெயர் சொல்லி அழைக்க மறுத்து
பண்பாடு மறவாது பகுத்தறிந்து பேசிடும்
புதுமையே நீ தமிழ் பதுமை என்பதில் ஐயமில்லை !



04 June, 2013

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 7





உனது பெயரை சொல்லும்
மண் சிலை ஒன்றினை
எனது வீட்டு அலமாரியில் குடியிருத்திருக்கிறேன்
அடுக்களை வரை உனது குடியுரிமை
பெறும் வரையில் இருந்துவிட்டு போகட்டுமே !



காற்றாடி கண்டுபிடித்தவன் நானாகியிருந்தால்
உனது காதோர தலைமுடியின்
முதல் விதி என்று பதிவு செய்திருப்பேன் !



நான் படிக்கும்
இரண்டு பக்க நாளிதழ் நீயடி !
முதல் பக்கத்தினையே இன்னும்
எழுத்துக்கூட்டி வாசித்து கொண்டிருக்கிறேன் !



வாரத்தின் மலர் என்பதை
என்னால் ஏற்க முடியவில்லை
வானத்தின் மலர் என்பதே
சரியான கூற்று ஆகும் !



மலரின் மென்மையினை
உன் விரல் பிடித்து
இடுப்பளவு வளர்ந்திருந்த
பருத்திகிடையே நடந்த போது
சற்று முன் வெடித்த இளவம் பஞ்சின்
இனம் சொன்னதடி எனக்கு !



மீன்களுக்கு அன்னமிடும்
கயல்மீன் விழியாளை கண்ட
கொக்குகள் அனைத்தும் நீரின் மேல்
ஒற்றை காலில் தவம் கிடக்கின்றனவாம் !



இரண்டு அடிகளில் உனக்காக
எழுத முயன்று தோற்கிறேனடி
வள்ளுவனே மனைவிக்கு
நான்கு அடிகளில்தான் எழுதியிருக்கிறார் !



உனது இமைகளுக்கான கர்வம்
எனது பேனாவுக்கும் வந்திருப்பதாக தெரிகிறது
அதிகமாக உனது விழிகளை பற்றியே
ஆராய்ந்து கொண்டிருப்பதால் !



நான் வெறுத்த மீன் உணவை
நீ நிறுத்தியது அறிந்து
மீன்கள் நீர் துறந்து உண்ணாவிரதம் இருக்க
அனைத்துவகை மீன்கள் சங்கமும்
அறிவிப்பு வெளியிட்டுள்ளது !



உனை பார்த்ததுமே
காதல் சுரப்பிகள் அனைத்தும்
அன்னிச்சை செயலென
ஆதரவு கொடி தூக்கி
காதல் அணுக்களுக்கு எல்லாம்
ஆயுதம் விநியோகம் செய்கின்றது !