09 July, 2010
என்னை மறந்து விடாதே..!
பேனாவோடு எனக்கிருந்த
நட்பின் ஆழம் அதிகமாய் உள்ளது
சில நேரம் வெட்கப் புன்னகையில்
பேனாவின் முகம் கூட சிவந்து போகிறது
உன்னைப் பற்றிய உரைகளினால்..!
உரைகளின் வரிகள் சுருக்கமானால்
கரைகிறது
சொக்காப் பையில் நீல நிறமாய்..!
நிறங்கள் மாறினாலும் வலிகள் மட்டும்
என்றும் மாறாமல்..!
அடிக்கடி உன் நினைவால் துடிக்க மறக்கும்
இதயத்தை தன் கண்ணீர் கொண்டே
நனைத்து அழைத்து வருகிறது பூமிக்கு
உன்னைப் பற்றிய உரைகளை தொடர..!
உன்னைப் பற்றிய வரிகளில் மட்டும்
நிறப்பிரிகையை மிஞ்சும் அளவுக்கு
புதுசாய் வண்ணங்களை
தன்னுள்ளே உருவாக்கிக் கொள்கிறது...!
வண்ணங்களை வகைப்படுத்த
அறிவியல் விஞ்ஞானிகளின்
படையெடுப்பு என் வீட்டின் முன்னே
திருவிழாவைப் போல் உள்ளது..!
வாரம் சென்ற பின்னும்
தனக்கான பதில் மட்டும்
இன்னும் வரவில்லையே என்று
எண்ணி நேற்றைய மாலை
மரணத்தை தழுவினானடி பெண்ணே!
என் நண்பன்..!
அவன் போகும் போது உனக்காக
எழுதிய கடைசி கவிதை கண்ணீருடன்
“ என்னை மறந்து விடாதே “
என்றும்..!
என்றென்றும்..!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
from vaaram sentrapinum.............. "dont forget me". varthaikalin korvai intha idathil arumai.
நன்றி...!
Post a Comment