அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

01 September, 2012

மீண்டும் ஐந்து விரல்களுடன்

மௌன விழிகளோடு
மையம் கொண்ட
கவிதை மொழிகளோடு
செவி சாய்க்கிறேன்!

மொழிப் பெயர்பாளன்
உன் விழி பேசும் மொழிக்கு!

தற்சமயம் என்ன மௌன விரதமா..!

வலக்கையின் ஆறாம்
விரலில் இருந்து ஒலிக்கும்
கேள்வி இது..!

மௌனம் களைய
கவன ஈர்ப்புத் தீர்மானமொன்று
தமிழ் விடுக்க வேண்டுமென்றே

தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
நிராகரித்துவிட்டேன் உன்னையும்!

மனதிற்க்கும் கோடைக்காலமா
சில காலம் நண்பனை
சொக்காப்பையதனில்
இருப்பிடம் சேர்க்கிறேன்
மீண்டும் ஐந்து விரல்களுடன்....