06 June, 2013
மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 9
♥
உன்னை நினைக்காத நாளில்லை
என்பது கணிதத்தின் சரியான கூற்று இல்லை
நினைத்திடாத நாளிகை இல்லை
என்பதே சரியான தீர்வு !
♥
நீ தேவதையும் இல்லை
அரக்கியும் இல்லை
குறிஞ்சு மலர்கள் கூடி பேசிடும்
மலரே நீயடி !
♥
எனது கவிதைகள்
உனது விழிகளால் சலவை செய்யப்பட்டு
தினம் தினம் புதுமையாய்
நிறப்பதிவுகளை துயிலில் இருந்து எழுப்புகின்றன !
♥
என்னை ஊருக்கு அனுப்பும் போது
விழிகள் நிரப்பும் வித்தியினை
எங்கிருந்து கற்று கொண்டனவோ உனது விழிகள்
அழாதே அழுதுவிடுவேன் நானும் !
♥
உன்னோடு பயணம் செய்யும்போது
உன்னையே வாகனம் செலுத்த சொல்வதுண்டு
இமைக்கும் உனது விழியழகை
இமைக்காமல் பார்ப்பதற்காக !
♥
எனது மீசைக்கும்
உனது புருவத்திற்கும் காதலாம்
உனது கண்களோடு என் இதழ்கல்
காதலை வெளிப்படுத்தியதிலிருந்து !
♥
கற்காலம் படித்துவிட்டேன்
கண்ணகி காலமும் படித்து விட்டேன்
இப்போது கனவுகளில்
உனக்கு கணவனாகும் காலம்
பற்றிய குறிப்பு சேகரித்துக் கொண்டிருக்கின்றேன் !
♥
நீ மஞ்சள் பூசிய நாளிலிருந்து
மற்ற கிழங்குகள் அனைத்தும்
நிறமற்ற நோய்காக மருந்து வேண்டி
மருத்துவரிடம் தஞ்சம் புகுந்துள்ளன !
♥
மாத விளக்கு பூசையில்
மின்சாரம் தொடர்பு துண்டித்துபோக
விளக்கொளியில் ஒரு நிமிடம் திகைத்து போனேனடி
அம்மனே அமர்ந்திருப்பது போல நீ !
♥
நான் வேட்டி கட்ட பழகி தந்தேன்
பயத்தில் எனை கட்டிக்கொள்ள
யார் பழகி தந்தார்களோ
இது அன்னிச்சை செயலென ஆய்வுகள் கருதுகின்றன !
♥
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment