அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

21 April, 2011

உணவு இடைவேளையில் சில கிறுக்கல்கள்


புவி ஈர்ப்பு விசையால்
நடை பழகிய என்னை
விழி ஈர்ப்பு விசையால்
தவழ செய்தவள் நீ..!


பேனா கொண்டு கைகளில் கிறுக்கி
நாட்கள் பல கடந்து விட்டன..
மீண்டும் கிறுக்குகிறேன்..
ரேகை செல்லும் எல்லாம்
உன் பெயரை மட்டும்..!

அடுக்கடுக்காக அமைந்திருக்கும்
பற்களின் வரிசையில்
கொன்று இழுக்கும்...!
சிங்கப் பல்லின் அழகை ரசிக்க
தினம் ஆயிரம் நகைசுவை துணுக்கை
தேடி நான்..!

அரசிடமிருந்து அவசர செய்தி ஒன்று:
வார விடுமுறைகளில்
நிலவு நண்பணை காணவில்லையென்று..!
மத்திய மாநில அரசின் கூட்டுப்படை ஒன்று
தமிழ்நாட்டில் களமிறங்கியுள்ளது...!
வார நாட்கள் கடந்ததை
கண்ணிமைக்காமல் ஒரே மூச்சில்
விழி வழியோடி என் இதயத்தினுள்
துடிப்பினை துரிதப்படுத்தும்
தேவதையின் விழி காண
அவன் வந்ததாக
தின நாளிதழ் அனைத்திலும்
தலைப்புச் செய்தியடி..!!

உனக்கு பிடித்த நிறம் என்ன..! ..?
என்னோடு உன் வினா இது..!
கருவிழி மட்டும்தான் பிடிக்கும் எனக்கு..!!

No comments: