21 April, 2011
மனமில்லையா...! மனது இல்லையா..!
காகித கப்பலில் காதலின்
காவிய பயணம்..!
கெஞ்சலும்...
கொஞ்சலும்...
மிஞ்சலுமாய்..!
நிழல் உருவங்களுக்கு
கண்மூடி வண்ணம் தீட்டுகிறாய்
உணர்ச்சிகளோடு..!
தவழ்ந்த மண்ணின்
மல்லிகைக்கு மனமில்லையா...!
இல்லை மனது இல்லையா..! ?
கடைக்கண்ணின் கண்ணீர்
துளிகளால் கவிஞனானேடி பெண்ணே..!
உதிரியாய் போன உலரல்களை
வர்ணித்து வரைவுபடுத்தியது நீதானே..!
நிஜமாய் கலக்கம் அடைந்தேன்
என் மீது காதல் என்றபோது..!
ஏன் என்றேன்..?
தவணையாக பெறும் அன்பதனை
தாராளமாக பெற வேண்டுமென்றாய்..!
பதில் தெரியாமல்
மௌன பதற்றமது
மாற்றம் கொண்டது..!
பாவை மனதை
பாளாக்கி விட்டேனோ..!
எதையோ தொட்டணைத்து
நான் தொடங்கிய
வரிகளால் வாக்குபட வேண்டுமென்கிறாய்..!
பெண்ணே மழை அது
நின்றே போய் விட்டது..
இன்னும் ஏன் குடைவிரித்து நிற்கிறாய்..!
கலக்கம் வேண்டாம்..
கனவுலகில் காதல் காவியம்
படைத்துள்ளேன்...
நாயகி நீதான்...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment