21 April, 2011
எதிர்பார்ப்புகளோடு நான்......!!
உன்னோடு ஒரு முறையாவது
நிலாச்சோறு உண்ண வேண்டும்..!!
பௌர்ணமியின் ஒளியில்
கதைகளாயிரம் கதைக்க வேண்டும்..!!
கடற்கரை மணலில் அமைதியாக
ஐந்து நிமிடம்; அலைகளின் தாலாட்டோடு..!!
எனக்கும் ஆவல்தான்
உன் தலைவாரி பூச்சூட..!!
உன் அழுகையோடு
சிரிப்பினை பதிவு செய்த விழாவில்
நீ
பகிரும் முதல் இனிப்பு
எனக்காக இருக்க வேண்டும்..!!
நீ என்னோடு மட்டுமே இருந்துவிடு
உயரமான கட்டிடத்திற்கென்ன..!
உன் பிறந்த வீடான
நிலவிற்கே!!
அழைத்து செல்கிறேன் மறுமுறை..!!
இருவருக்குமே
வருடம் இது
திருப்பமாகவே அமையும்..!!
எதிர்பார்ப்புகளோடுதான் இருக்கிறேன்...
என் காகித கப்பலும்
ஒரு நாள் கரையை அடையும் என்று..!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment