அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

21 April, 2011

எதிர்பார்ப்புகளோடு நான்......!!


உன்னோடு ஒரு முறையாவது
நிலாச்சோறு உண்ண வேண்டும்..!!

பௌர்ணமியின் ஒளியில்
கதைகளாயிரம் கதைக்க வேண்டும்..!!

கடற்கரை மணலில் அமைதியாக
ஐந்து நிமிடம்; அலைகளின் தாலாட்டோடு..!!

எனக்கும் ஆவல்தான்
உன் தலைவாரி பூச்சூட..!!

உன் அழுகையோடு
சிரிப்பினை பதிவு செய்த விழாவில்
நீ
பகிரும் முதல் இனிப்பு
எனக்காக இருக்க வேண்டும்..!!

நீ என்னோடு மட்டுமே இருந்துவிடு
உயரமான கட்டிடத்திற்கென்ன..!
உன் பிறந்த வீடான
நிலவிற்கே!!
அழைத்து செல்கிறேன் மறுமுறை..!!

இருவருக்குமே
வருடம் இது
திருப்பமாகவே அமையும்..!!

எதிர்பார்ப்புகளோடுதான் இருக்கிறேன்...

என் காகித கப்பலும்
ஒரு நாள் கரையை அடையும் என்று..!!!

No comments: