01 January, 2011
நான் கவிஞனா......!!!!
என் கவிதையின் வரிகளுக்கு
உயிரூட்டியவளே நீதானே!
ஏனோ என் பேனாவுக்கும், தமிழுக்கும்
உன் மீதான காதல் மட்டும் இன்றும் அப்படியே!!!
துயிலும் போது என்னோடு உரைத்த
மௌனத்தையே மொழி பெயர்த்தேன்..!!
மௌனத்திற்கே இத்தனை மொழிகள் என்றால்....!
கண்ணின் கருவிழி விளக்க
ஜென்மம் ஏழு எடுத்தாலும் தீராது!!
கைப்பேசிக்கே உயிரளித்தவள் நீ!!
கள்ளன் அவன் காதோடு
முணுமுணுத்த வெட்க மொழி இது!!
தாவணியில் ஒரு கணம் பவனி வந்து பார்...!!
வீட்டின் தரைக்கும் உன் மீது காதல் வரும்..!!
உன் பேச்சுகள் அனைத்தும் தான்!
என் கவிதையின் மூச்சுகள்!!
கவிதைகள் கோடி பல எழுதலாம்
பெண்ணே பற்றி உன்னை!!!
போதாது இவ்வுலக மூங்கில் காடுகள்!!
ஆக்டோபஸின் ஜோசியமும் பொய்க்கும்
உன் விழிக் கண்டு பின் உரைத்தால்!!
மறுமுறை வாராதே சேலையில் முன்பு!
இல்லை என்னோடு இன்னோரு இதயம்!!!!!!!!!
உயிரோடு உணர்ச்சி ஒரு புறம் இருக்க
கவிஞன் இவன் என்றால் தகுமோ!!!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
உம்மைக் கவிஞர் ஆக்கி விட்டாள் அவள் . சந்தேகமேயில்லை
Thanks for Your Comments
நிஜமாகவே கவிஞனாக்கி விட்டாள்....கற்றுகொண்டேன் கவிதைகளை காதலிக்கவும்...மௌனங்களின் இளவரசனாய்
Post a Comment