ஆயிரம் விளக்குகள்
என் திசை நோக்கி...
ஆனாலும் நிழல் இல்லா..
நிசப்தமான தேகம் பெற்றேனடி..!
பேனா மீதும் பேரன்பு..!
அமாவசையிலும் முழு நிலவு..!
தாவணி கொண்ட தமிழ் கண்டு
தரணி மொழிகளெல்லாம்
தாயகம் தவிர்க்க தயாராகிவிட்டது..!
நீ சூடி கலைந்த
மல்லிகைக்கும், மணிமகுடம்..!
மௌன பேரரசர்..!
காலனும் கவிதை வடிப்பான்
பெண்ணே ! உன் கண்களால்.!
சரித்திர காவியமாகும், என் கவிதையும்
என் காதலால்...உன்னோடு...!
3 comments:
மௌனத்தில் இருந்து தோண்டிய வைரம் போன்றது உங்களின் இந்த முத்தானக் கவிதை
Thanks for Your comments
மௌனம்....அவள் விழிகளில் கற்றது...
Post a Comment