அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

01 January, 2011

மௌனம் கலைத்த தேவதை......!!!!




ஆயிரம் விளக்குகள்
என் திசை நோக்கி...
ஆனாலும் நிழல் இல்லா..
நிசப்தமான தேகம் பெற்றேனடி..!

பேனா மீதும் பேரன்பு..!
அமாவசையிலும் முழு நிலவு..!

தாவணி கொண்ட தமிழ் கண்டு
தரணி மொழிகளெல்லாம்
தாயகம் தவிர்க்க தயாராகிவிட்டது..!

நீ சூடி கலைந்த
மல்லிகைக்கும், மணிமகுடம்..!
மௌன பேரரசர்..!

காலனும் கவிதை வடிப்பான்
பெண்ணே ! உன் கண்களால்.!

சரித்திர காவியமாகும், என் கவிதையும்
என் காதலால்...உன்னோடு...!

3 comments:

Meena said...

மௌனத்தில் இருந்து தோண்டிய வைரம் போன்றது உங்களின் இந்த முத்தானக் கவிதை

Unknown said...

Thanks for Your comments

Unknown said...

மௌனம்....அவள் விழிகளில் கற்றது...