அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

21 April, 2011

விழி பற்றி


வழி தேடி வந்த இடத்தில்
விழி மூடும் முன்
ஒரு செய்தி!
விழி பற்றி விளக்கம் வேண்டும்
என்பது தான் அது!

என் விழி கொண்டு
உன் விழி கண்டு
விரல் ரெண்டு
அமுதுண்டு
பொய்யுரைக்காத வார்த்தைகள்
இவையாவும்...!

கரு விழிக்கும், வாய் மொழிக்கும்
இத்துனை மாற்றங்களா..!
விழிகளோ தாய்மை உணர்த்துகிறது !
வாய் மொழிகளோ பச்சிளம் குழந்தை போல் !

நான் கற்பனையிலும் கணித்திடாத
கரு விழியும் ! வாய் மொழியும் !


அசையாத விழிகள்
நான் கண்ட்து...
புகைப்படம் ரெண்டில்!

உரைப்பது
பொய்யா ! மெய்யா !
சந்தேகம் எனக்கு..!

சந்தேகமும் ! சந்தோஷமும் !
எதிராளியின் விழியசையு கொண்டு..!

உன் விழி
கருணை, காதல்
அன்பு, ஆர்வம்
நட்பு, நேசம்
பாசம், பரிவு
இவையணைத்தின்
ஏணிப் படிகளின்
மேலிருந்து இரண்டாம் படியில்
முதல் படி வெகு தூரம் இல்லை


விழிக்கும், இமைக்கும்
இடையே உள்ள தூரம்ட் தான்
நம் நட்பு போல..!

விழி மூடினாலும்
வழி தேட மறுக்காதே !

உறவுக்கும், உறக்கத்துக்கும்
நேரக் கட்டுப்பாடு வேண்டாமடி !

விழியின்
சில
ஏக்கங்கள், ஏமாற்றங்கள்
நான் அறிந்த்தே !

ஏன் இந்த விழிகளின் மௌன்ங்களை
இத்யத்திற்க்குள் சிறை வைக்கிறாய் !

பறக்க விடு பட்டாம்பூச்சியாய்!
உன் அறையினுள் அல்ல.....!
வெளியுலகம் செல்...
உனக்காக....
உன் விழிக்காக...
புத்தம் புதிய உலகம் ஒன்று !
இப்போதே சன்னல் திற.....!
வெளிச்சம் விழிகளின் வழியே........!
இதயத்திற்க்கும்.

No comments: