அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

21 December, 2012

முதல் முத்தம்


(இதழ்களின் சொற்பொழிவு)



சந்திரன் நாணம் கொள்ள
சூரியன் சாட்சி சொல்ல
தென்றலோ !
சானம் கலக்கி வாசல் தெளித்திட
சிட்டுக்குருவிகள் !
புள்ளி வைத்து கோலமிட
சத்தமில்லாமல் சறுக்கிடாமல்
சற்றே பின் வந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
கலைந்து கிடந்த கூந்தலினை விலக்கி
காதோரம் ஈரம் பட்ட விரல்களின் வரைவு
தென்றலின் ஈரமும்
சுவாசத்தின் வெப்பமும் கலந்திட
இட கை கோர்த்து
இடை சேர்த்து வல கை அள்ளிட
கால் விரல்கள் வெட்கத்தில் தலைகுனிந்திட
விழிகளோ இதழ்களோ
பேச அனுமதிக்கவில்லை
பேசவும் தயாராக இல்லை
நெற்றி சங்கமிக்க
புருவங்கள் புன்னகையிட
பருவமது ஆணையிடாமலே அணைத்தபடி
பருகியதடி இதழ்கள்…
இதழ்களை…இதழ்களினால்..!
அமுதம் தானோ.. அமுதமே தானோ..!
மீறிடாத வறைமுறைக்குள்
மானிடனாய்
மன்மதனாய்
மணிகண்டனாய்
மணித்துளிகளில்
தேன் இதழ்களின் தேவாமிர்தம்
காற்றினை மென்ற
இதழ்கள் பேசியதுதான் “முத்தமோ”
முத்தமே….
இது இதழ்களின் சொற்பொழிவு…!

No comments: