அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

24 August, 2012

மறுமடியும் வேண்டாம்... மறுமடலும் வேண்டாம்....

கடந்தகாலம் காப்பீடு செய்யவில்லை
கவிதைகளாவது காப்பீடு செய்கிறேன்
உன் இதயத்தில் !

கண்களோடு கவி தொடங்கினேன்
காதலால், காதலில் அல்ல!

என் தமிழ் கவி உலகம்
தற்காலிகமான பதவி தந்துள்ளது
உனக்கு
விருப்பமா… நிரந்திரமாக !
நித்திரையில்லை நிஜமாக
நீலக்கடல் தாண்டியும் நித்தம் வந்து
தினக்கூலி கேட்கிறாள்
என் இதயம் தந்தும்!

இதயம் தொலைத்த என்னோடு
இன்பத்திற்க்கு ஏங்குவது
வேண்டாம் பெண்ணே
மறுபடியும் வேண்டாம்!
மறுமடலும் வேண்டாம்!

No comments: