அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

28 August, 2012

என் அவள் ! என்ன அவள் ! என்னவள் !

வாட்டிய வெயிலுக்கு பின்
தென்றலின் உச்சமாய் வீசிய
மழைத்துளியின் சில துளிகள்....

அவள்...
அவளா...
அவளால்...!

மையல் விழிகளில்
மையிட்டுருப்பாளோ !

சுருள் முடியின்
சுற்றளவு சொல்வாளோ !

நொடிகளில் லட்சம் மொழிகள்
விழிகளில் சொல்வாளோ !

அனைத்துவகை பூக்களின் மாநாட்டில்
தேசிய மலராக அறிவிக்கப்பட்டவளோ !

புத்தகத்தின் மத்தியபிரதேசத்தில்
அரிசி போட்டு மயில்தோகை வளர்பவளோ !

பௌர்ணமி நிலவையும்
வெட்கம் கொள்ள செய்பவளோ !

நடைவண்டி ஓட்டிருப்பாளா !

கண்ணாடி வளையல் மீது
கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருபவளோ !

இடது கை பழக்கம் கொண்டவளோ !

நாடி துடிப்பில்
நாட்டின் மீது பற்று கொண்டவளோ !

படிப்பில்
பட்டம் பெற்றிருப்பாளோ !

பூவானவல்
பூச்செடிகளை வளர்பவளோ !

விழியில்
புன்னகை செய்பவளோ !

மொழிகள்
நூறு கற்றவளோ !

அன்பின்
இலக்கண மொழியாளோ !

பாட்டி மருத்துவம் படித்தவளோ !

ஆவி பறக்க
அசைவம் உண்பவளோ !

விழிகளில்
தூறல் செய்பவளோ !

வெள்ளி செவ்வாய்
கோவில் செல்பவளோ !
ஆடு மாடு கோழி கூட
அரவணைத்து நடப்பவளோ !

கோபத்தில்
கொள்ளை பிரியம் கொண்டவளோ !

மருமகள்
மகளாக வருவாளோ !

தலைகோதி
தாலாட்டு சொல்வாளோ !

மடி சாய்த்து மனதின்
மலைபாரம் குறைப்பவளோ !

அரும்பிய மீசையினால்
ஆன்மாவை ஆள்பவளோ !

பாவையினர் பூச்சூடும்போது
என்னை அள்ளி சூடுபவளோ !

மொட்டை மாடியில் கூழ்வடகம்
குனிந்து ஊற்றுபவளோ !

அதிசயமாகி போன
அடுக்களை சமையல் செய்பவளோ !

அதிகாலை சூரியனுக்கு
காட்சி தருபவளோ !

அச்சத்தில்
அத்தானை கட்டிக் கொள்பவளோ !

சந்தேகத்தை
சாக்கு பையில் கசக்கி இட்டவளோ !

வாசல் வந்து விழியால் செய்தி சொல்லி
வழியனுப்புவாளோ !

என் தோள் சாய்ந்து
சொர்க்கம் காண்பாளோ !

காக்கைக்கும்
கல்லில்லா சோறு படைப்பாளோ !

மல்லிகைக்கும் மஞ்சளுக்கும்
சொந்தகாரி இவள்தானோ !

பைங்கிளி தமிழில்
என் கவிக்கு உயிர் தருபவளோ !

அன்னப்பறவை அசந்து போக
குழந்தைக்கு பால் தருபவளோ !

மொத்தத்தில் சத்தமில்லா
ஒரு முத்தத்தில்
என் இதயம் வந்தடைவாளோ !

மழை நின்றது !

No comments: