அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

14 August, 2012

பசியின் சுவை!

தாத்தாவின் தவறினால்
தலைகீழாய் போன நாட்களில்
உணவுவேளையில் உண்ண வருகையில்
வாசல் அடைத்து அமீனா நிற்க்கையில்
செய்வதறியாது ஊர்பார்க்க
அழுதுகொண்டே சென்ற நேரம்
உணர்த்தியது எனக்கு
பசியின் சுவையினை !

2 comments:

Yaathoramani.blogspot.com said...

பசியின் சுவையினை அறிவதற்கும்
அதிர்ஷ்டம் வேண்டும்
ஏனெனில் அதுவே வாழ்க்கையில்
பல சுவைகளை மிகச் சரியாக
சுவைக்க கற்றுக் கொடுக்கும்
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

உண்மைதான்
மிகச் சரியாக
சுவைக்க கற்றுக் கொடுக்கும் என்பது.

வாழ்த்துக்களுக்கு நன்றி.