அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

17 August, 2012

என்றும் அன்புடன் பைத்தியக்காரன்!

மௌனம் களைத்த
உன் மொழிகளை மொழி பெயர்த்தது
நான் தானே; என் தமிழோடு சேர்ந்து!

கண்டிடாத....
தாவணிக்கும் கொலுசுக்கும் கூட
கோடி பல வரிகள் வார்த்ததடி
என் தமிழ்!

உன்
ஒவ்வொரு வார்த்தைகளையும்
பொன் மொழியாக அறிவித்தது
என் செம்மொழிதானே!

மொழிக்காக
வெறும் விழா மட்டுமெடுக்கும்
மடையனல்ல நான்!

மொழிகள் மற்றவற்றில்
நாட்டமில்லை என்றில்லை
தாய் மீதுள்ள அன்பு !
என் தமிழ் மீதும்!

ஏனோ உன்னால்
நீ உச்சரித்த தமிழால்
தமிழ் மீதும் பற்றாளனானேன்!

உன் மீது
என் தமிழுக்கு காதல்!
தமிழ் மீது
எனக்கு காதல்!

யார் யாரோ
பாவம் இவன்
தமிழ் பைத்தியக்காரன்
என்றபோதை விட
ஓராயிரம் எழுத்தாணி
இறங்கியதடி இதயத்தில்
தமிழ் பைத்தியக்காரன்
இவன் என்றபோது

நிஜமாகவே
நான் பைத்தியக்காரன் தான்
உன் அன்பின் மீதும்
என் தமிழ் மீதும்

என்றும் அன்புடன்
பைத்தியக்காரன் !

No comments: