அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

12 August, 2012

பார் முகிலே

எழுச்சிகளும், புரட்சிகளும்
நூற்றாண்டுகளாய்
இன்றும் இரண்டாம்
பிரஜையாக

அசைவுகள் அலசப்படுகின்றன
அணிகலன்களோ ஆராயப்படுகின்றன

எழுத்துக்கள்
ஏட்டில் அன்று
கணினியில் இன்று !

புறா தூதுவிட்டோம்
மின்னஞசலில் ஒலி வேகம் மிஞ்சினோம் !

காட்டில்
பிள்ளையார் சுழியிட்டது
வீட்டிலும்
சாலை அமைக்கிறது
பயணத்தின் பாதுகாப்புகாக
பயம் வேண்டாம்
நயம் வேண்டும்

பார் முகிலே
பலவீனம் கற்றுக்கொள்
இனம் தழைக்க
வளம் செழிக்க

சலுகை அது
வாழ்க்கையல்ல !
சுயம் பேன
சுதந்திரம் வேண்டும் !

அடி மனதில் எழுதப்பட்ட
சில
எழுதப்படாத சட்டங்கள்
அழித்தொழிக்க வேண்டும்

அவள்
அவளாக வாழ
அவள் மனதில்
அவளோடான
அடிமை எண்ணம் அகற்ற வேண்டும் !

நாற்குணம் என்றும்
நற்பண்பு என்றும்
வேலிகள் போட்டுப் பெண்ணை
வீட்டுக்குள் அடைத்தோர் நாண
காக்கி உடையணிந்தும் இங்கே
நாட்டினைக் காக்கின்றார்கள்
இருந்தும்......
சீதனம் என்னும் சிறுமை இன்னும்
சீராக அழியவுமில்லை
ஆணாதிக்கமும் அடக்கு முறையும்
முற்றாக ஒழியவுமில்லை

பார் முகிலே
உனக்கு உரைக்க காரணம்
பிழை கூற இயலாது
தலை குனிந்து
நிமிர வேண்டும்
நீ..!
கல்வி கற்று
உயர்வு பெற்று நாளைய முகிலாவது
நல்ல மழை தரவேண்டி...!

2 comments:

Yaathoramani.blogspot.com said...

சலுகை அது
வாழ்க்கையல்ல !
சுயம் பேன
சுதந்திரம் வேண்டும் !//

அருமையான வரிகள் மன்ம்
தொட்ட அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

வாழ்த்துக்களுக்கு நன்றி