அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

06 August, 2012

குழந்தைகளை கொண்டாடுங்கள்

ஆதியில் ஆற்றுமணிலில் ஆரம்பித்தோம்
அடுத்ததாய் சுவடிகளில் சுவாசித்தோம்

பேசுபவர்களுக்கு மத்தியில்
வாசிக்க வாசிக்க
புத்தகமாய் போதி மரங்கள்!
இன்று புத்தகம் பொதி சுமக்கும்
புழுவாய் பிள்ளைகள் அனைத்தும்
கழுதையும் பொதி சுமக்க
கற்றது இங்கே தானோ!

கலோரி பற்றி கற்பிக்க
காலாவதியான பாடங்கள்
பெயரளவில் சத்துணவாய்
சமச்சீர் கல்வி!

புல் நுனியின் பனித்துளி பைங்கிளிகள்
பட்டாம்பூச்சி பிடிக்க தடைச்சட்டம் வந்ததோ!

மழையில் காகித கப்பல்விட
கோட்பாடுகள் கொண்டுவரப்பட்டனவோ!

கண்ணாம்பூச்சி விளையாட்டும்
கண்கள் மூடிக்கொண்டனவோ
பம்பரம்கூட விளம்பரத்தில்தான்!

விளையாட்டை பறித்துக்கொண்ட
இது என்ன விளையாட்டு!

எதிர்கால வெளிச்சத்திற்க்கொன்று
தீக்குச்சியாய் மழலைகள்

குழந்தைகள் தினம் கொண்டாடுவதை விட்டு விட்டு
குழந்தைகளை கொண்டாடுங்கள்!

No comments: