அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

03 June, 2011

நிழல்களான நினைவுகள்...!






நினைவுகளை...
நிழல்களானதை !
நினைவுபடுத்தியது...!

“எப்படி இருக்க...
call பண்ணவே இல்ல”

மாதங்கள் கடந்தவை
கவலைகளை மட்டுமே
சுமந்து சென்றன..!

சுமைகள் கொண்டு
விழிகளிரண்டிலும்
தூக்கத்தின் தாக்கம்
மறந்தே போனாயோ..!

மறந்திருப்பாய்...
மே, ஜீன் மாதங்களை
கடந்த வருடத்தின்..!

நினைவு கூறுகிறேன்...!
நித்திரையின்றி அலைவதை..!

மறக்க முடியவில்லை
விழிகளின் கனவுகளையும்...!
கண்ணீர் துளிகளையும்..!


உனக்கு !
தமிழ் படிக்க பிடிக்காது
என்பது மட்டுமே பிடித்த ஒன்று
எனக்கு !

இதயத்தின் சறுக்களினால்
இந்த கிறுக்கல்கள்...!

பேதையவள் கண்களினால்
மெய் மறந்தே போனேனடி..!

உயிர்மெய்யும்....
மெய்யாகும் பெண்ணே...!
உயிர் குடிக்கும்
விழிகளிரண்டினால்....!

3 comments:

murugesan said...

'''''""""""உனக்கு !
தமிழ் படிக்க பிடிக்காது
என்பது மட்டுமே பிடித்த ஒன்று
எனக்கு""""""""""""""""""""""""""""" !------------------------------------------------------------------
வரிகள் புரியவில்லையே.....பிடித்த வா? பிடிக்காத வா?

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

பிடித்த ஒன்று தான்....காரணம்...தமிழ் படிக்க பிடிக்காத அவளுக்கு என்றாவது படிக்க பிடித்திருந்தால்...அது என்னால் இருக்க வேண்டும் என்பதற்காக