அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

27 July, 2012

கருவறையில் நடக்க விரும்புகிறேன்...

நட்பில்..
நட்பால்...
நட்போடு....

துண்டு பிரசுரத்தில் கவிதை
படிக்க அலைந்த நாளொன்றில்
கவி புத்தகமொன்று
நட்பு கவிதை பகிர்ந்தது..!

எழுத்தில்...
எழுத்தால்..!

உன் குறிப்பு
புதுமையென்றும்..
உன் நட்பே
போதுமென்றும்..!

நான் தொலக்க விரும்பவில்லை
கருவறையில் நடக்க விரும்பினேன்..!

காணாமல் போனவர்கள் பட்டியலில்
நான்..! முதலிடத்தில்..
பலரது நட்பில்... நட்பால்..!

கடைகோடியிலிருந்தும்
கார்மேகங்களுக்கிடையே
கண்டு கொண்ட
நட்பு இது..!

வித்து விதைத்து
ஆ(ள)ழ விரும்பியவளே
வேரறுத்து தரிசாகி போன
இந்நிலத்தில்..
கங்கை..காவிரி
நீர் தொளித்து
கடவுள் எடுத்தாய்
ஊர் காண...!

கண்டதில்லை கண்கள்
குலுக்கி கொண்டதில்லை
கைகள்..!
ஆனாலும்..
நட்பு பாராட்டுகின்றோம்
கவி நட்பில்
கவித்துவமான நட்பில்..!

காதலால் கவினாகவில்லை
கண்களால்...
விழிகளின் மொழிகளினால்...!

என் கவிதை இரசித்தவர்கள்
இதயம் படிக்க விரும்பவில்லை
உன்னை தவிர..!

விவரமறிந்து யாருமே விழித்திடாத
மாப்பிள்ளை.....!
வித்யாசமாகதான் இருந்தது
ஆரம்பத்தில்...
மின்னஞ்சலின் ஆதியில்
இப்போது
அலங்கரிக்கவில்லையென்றால்
அடுத்தநாள் வரை
அடுக்கடுக்கான
ஆயுத எழுத்துக்களின் கேள்வி குறிகள்...!

அன்னை தவிர யாரும்
அமுது படைத்ததில்லை..
அன்பான உன் குடும்பத்துடன்
பௌர்ணமி நிலவில்
நிலாச்சோறு....!
மூன்றாம் பிடி
உருண்டை சோறு
என் கையில்...
ஒரு கடி அப்பளத்தோடு..!

அமைதியான
அந்திமாலையில்
என் வருகை பதிவுக்காக வாசலில்
காத்திருந்து பூத்த மலர்களுக்கிடையே
பகிர்ந்து கொண்ட
மொழிகள் இவையாவும்..!

இறுதியில் ஒன்றும்..

ஜென்மங்கள் நிஜமானால்...
உன் நட்பின் கருவறையில்
நான் நானாக நிலைத்திட வேண்டும்...

என்றும்...
என்றென்றும்....

2 comments:

Yaathoramani.blogspot.com said...

கண்டதில்லை கண்கள்
குலுக்கி கொண்டதில்லை
கைகள்..!
ஆனாலும்..
நட்பு பாராட்டுகின்றோம்
கவி நட்பில்
கவித்துவமான நட்பில்..//


!மனம்தொட்ட அருமையான வரிகள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

வாழ்த்துக்களுக்கு நன்றி