அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

11 July, 2012

“சொற்பொருள் பின்வருநிலையணி”

தொலைத்துவிட்டேன் என்றிருந்தேன்
வேண்டுமென்றே தொலைந்துவிட்டாய் என்று
இந்நாள்...உன்னால் உணர்ந்து கொண்டேன்

துணிவில்லாதவன் என்று
தொலைந்து போய்விட்டாயோ...
என் கால் ஊன்ற தவித்துக் கொண்டிருந்த நேரம்
என் தோள் சாய தவிர்த்து தொலைந்து போய்விட்டாயே...

இன்று மாடி கட்டி
மகாத்மாவினை அச்சிட்ட
காகிதங்களாய் அடுக்கி வைத்திருக்கிறேன்
அடுத்து நின்று அழகு பார்க்காமல்
தொலைந்து போய்விட்டாயே...

என் இதயத்தின் துடிப்பினையும்
வறுமைக்கோட்டுக்கு கீழ்
கணக்கிலிட்டாயோ..!

இன்று முதல் சிரிக்கவும்
சிற்பங்களோடு கற்றுக்கொள்கிறேன்..

வாழ்க்கை வாழதான்
உணர்த்தி தொலைந்து போய்விட்ட
உனது இதயத்தின் வரிகளை அணிகளில்
“சொற்பொருள் பின்வருநிலையணி”

எனக் கணக்கிலிடுவதோ...!

நான்
என்றுமே நானாகவே
இருந்துவிட்டு போகிறேன்..!

No comments: