♥
பறவைகளிடமிருந்து மொழி உருவாகியதாம்
உனது விழிகள் பேசும் மொழியினை அறிய
உலகம் முழுவதுமுள்ள பறவைகளின்
தமிக்குழு ஒன்று அமைத்திருகிறேன் !
♥
உன் விழி இமைக்கும் நேரம்
எனது இதயம் துடிக்கிறது
உனது விழி வியந்த நேரம்
நமது காதல் உருவானது !
♥
மொழி பற்றாளன்
இன்று விழி பற்றாளனாயி போனேன்
விழி மைதொட்டு
வீடு செல்லும் வழியெங்கும்
கவிதைகள் சொல்கிறேன் !
♥
எந்த விரல் கொண்டு
விழிகளுக்கு மையிடுகிறாய்
விரல் நகத்திற்கிடையே
உலக வங்கியில் சேமிப்பு வைத்திருக்கிறது
விழிகளின் குறிப்பினை !
♥
தூணில் சாய்ந்து கொண்டு
எனக்கான கவிதை வடிப்பின் போது
நீ அணிந்திருந்த மூக்கு கண்ணாடியினால்
விழி இடை தீண்ட தவித்து இயலாததால்
முற்றும் துறந்த தென்றல் என்னோடு மன்றாடியது
மாறிக்கொள்ள..!
♥
புயல் விரும்பும் தென்றல் நீ !
எந்த திசையில் நடக்கிறாயோ
அந்த திசையெங்கும் காற்றின் தசைகள்
அனைத்தும் புத்துணர்வு பெற்கின்றன !
♥
நான் இல்லாத போது கோபம் வருமாயின்
என் பெயர் சொல்லி கட்டிக்கொள்ள
பொம்மை வாங்கி தந்தேன்..
நித்தம் பதுமைகளிடம் வேண்டுகிறேன்
சத்தம் உன் மனதிலே வரக்கூடாதென !
♥
உனது பெயரில் சந்திரனில்
நற்பணி மன்றம் துவங்க
விழிகளின் ஒப்புதல் வேண்டி
மலர்களோடு காத்திருக்கிறேன் மலரே
மன்றமே மன்றாடுகிறது
விழிகளே !
♥
எந்த அளவினை கொண்டு
உன் மீதான எனது காதலை குறிப்பெடுக்க
அத்தனையும் அளவில் குன்றியதாய் தெரிகிறது
இத்தனைதான் கணிதம் போல !
♥
வண்ணத்துபூச்சி போல
விழிகளோடு விழிநோக்கும் நமது காதலை
தேவ லோகத்தில் பாடமாக்க போகிறார்களாம் !
♥
Showing posts with label மௌனங்கள் உயிர்த்தெழுந்தால். Show all posts
Showing posts with label மௌனங்கள் உயிர்த்தெழுந்தால். Show all posts
10 September, 2013
09 September, 2013
மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 11
♥
உன்னை பார்த்து கொண்டே ராட்டினம் சுற்றுகிறதே
அதற்கு தலை சுற்றாதா
விழிகள் முளைத்த ராட்டினமே
நீ மட்டும்தான் இமைப்பதில்லை !
♥
ஆளே இல்லாத வயக்காட்டில்
ஆள் காட்டி விரலை கோர்த்துகொண்டு
கவிதை பேசிக்கொண்டே நடக்கிறோம்
காற்றே நம்மை பின் தொடரும்
கவிதைக்கான குறிப்பு எடுத்துக்கொள்ள !
♥
என்னை கண்டதும் மறைந்து நிற்கையில்
உனது வெட்கத்தின் சாரலில்
எனது இதயத்தின் பரப்பளவு நனைந்து கிடக்கிறது
♥
எதனால் செய்த தூரிகை கொண்டு
பிரம்மன் துருவம் கொடுத்தானோ
அத்தனையும் அழகாகவும் ஆபத்தாகவும்
அமைதியாய் வெடிக்கின்றதே !
♥
உன் விழி சரணடைய காத்திருக்கும்
என் விழிக்கொன்னாலும் இத்தனை கர்வம் அதிகமடி
இமைக்க மறுக்கிறது
என்னை கடந்து செல்கையிலே !
♥
திருவிழா கூட்டத்தில் யாருக்கும் தெரியாமல்
கைமாறிய ரோஜாவினை சித்தியின் தலைமையில்
அமைந்த சிறப்பு பிரிவு கண்டுபிடித்துவிட்டது
அத்தைகென்று சொல்லி அவள் வீட்டில் பறித்த ரோஜா அது !
♥
இந்த மடலோடு நான் உனக்கு எழுதியது
10001 என புள்ளியியல்துறை கணக்கிலிட்டு
மடல் எழுதும் முறையை
பின்பற்றிய நமக்கு தபால்தலை வெளியிட
தபால்துறை சிறப்பு ஏற்பாடு செய்துவருகிறது !
♥
உனக்கு மிதிவண்டு சொல்லி கொடுத்தவன்
என்கிற முறையில் சொல்கிறேன்
நமது வாழ்க்கை பயணத்தில் சுமை தாங்கிட
இமையினால் வலி தாங்கிடவும் நீ தயார்தானென்று.
♥
நீ கட்டி தந்த சேலையினை அனைத்தபடி
உச்சி வெயில் வரை உறங்கி போனேனடி
மேலிருந்து சூரியன் கேட்கிறான்
நிலவினோடு இன்னும் என்ன கனவா..!
♥
உன் விரல் கடித்த
எனது பற்களிடம் கேட்கிறேன்
என்ன சொல்ல கடித்தாயென
என்னென்னமோ சொல்கிறது
இறுதியாக நீ வைத்த சாம்பாரின்
முருங்கைகாய் என கடித்து விட்டதாம் !
♥
07 June, 2013
மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 10

♥
வெண்ணிலவும் காவல் நிற்கும்
மாலையிலே நீ தலை குளித்து
மல்லிகை மொட்டு சூடி
விளக்கினிற்கு ஒளி தருகையிலே !
♥
வியாழனில் நூற்பாலைகள் அமைத்து
விண்வெளி சுற்றுப்பயணம் செய்து
சேகரித்த விண்மீன்களை
சேலையிலே ஆங்காங்கே
ஆய்வு செய்து நட்டிருகிறேன்
பிறந்தநாள் பரிசுக்காக !
♥
புளூட்டோவிற்கு தனிக்குடித்தனம்
போய்விடலாம் என்றேன்
அங்கே குளிர் அதிகம்
உன் குறும்புகளும் அதிகம் என்கிறாய் !
♥
பூமியிலே நீ சுற்றி பார்க்க
பயணம் ஏதும் செய்யாததால்
மனம் உடைந்த பூமி
தன்னை தானே சுற்றி காட்டுகிறது உனக்கு !
♥
நீ இட்ட மரமாகி விட்டதே
உன் இதயத்தில் நான் இட்ட விதையின்
முளை குறுத்து குறிப்பு அறிய வேண்டுகிறேன் !
♥
நீ நடந்து செல்லும் இடமெங்கும்
மரக்கன்றுகள் நட்டிருகிறேன்
உன் நிழல் வாடாமல் இருக்க
நிஜமோ பஞ்சாயத்தாரின் அசோகன் நானாகி போனேன் !
♥
உன் விழி கதிர்வீச்சினால்
என் இதயத்தில் காதல் வளரதானே செய்கிறது
பின் அணுகதிர்வீச்சுகொன்ன
இத்தனை போராட்டமோ !
♥
மொட்டை மாடியில் உனது மடியில்
தலை வைத்து படுத்திருக்கும் போது
விரல் நீட்டி நிலவு பாரு என்கிறாய்
நிலவே நான் உனது மடியில் தானே கிடக்கிறேன் !
♥
எனது முதுகினில் உனது முதுகினை சாய்த்து
எப்போதும் புத்தகம் படிக்கிறாய்
நான் உன் இதயம் பேசும் கவிதைகளை
எனது முதுகொலும்பில் சேர்த்து வைக்கிறேன் !
♥
உன்னை பார்க்கும் போது
இளையராஜாவின் இசை கேட்கவில்லை
தென்றலின் தாளம்தான் கேட்கிறது
எத்தனை தாளங்களடி
உன்னை பார்க்கும் போது தென்றலுக்கு
காற்றுக்கு தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பு உறுதி !
♥
06 June, 2013
மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 9

♥
உன்னை நினைக்காத நாளில்லை
என்பது கணிதத்தின் சரியான கூற்று இல்லை
நினைத்திடாத நாளிகை இல்லை
என்பதே சரியான தீர்வு !
♥
நீ தேவதையும் இல்லை
அரக்கியும் இல்லை
குறிஞ்சு மலர்கள் கூடி பேசிடும்
மலரே நீயடி !
♥
எனது கவிதைகள்
உனது விழிகளால் சலவை செய்யப்பட்டு
தினம் தினம் புதுமையாய்
நிறப்பதிவுகளை துயிலில் இருந்து எழுப்புகின்றன !
♥
என்னை ஊருக்கு அனுப்பும் போது
விழிகள் நிரப்பும் வித்தியினை
எங்கிருந்து கற்று கொண்டனவோ உனது விழிகள்
அழாதே அழுதுவிடுவேன் நானும் !
♥
உன்னோடு பயணம் செய்யும்போது
உன்னையே வாகனம் செலுத்த சொல்வதுண்டு
இமைக்கும் உனது விழியழகை
இமைக்காமல் பார்ப்பதற்காக !
♥
எனது மீசைக்கும்
உனது புருவத்திற்கும் காதலாம்
உனது கண்களோடு என் இதழ்கல்
காதலை வெளிப்படுத்தியதிலிருந்து !
♥
கற்காலம் படித்துவிட்டேன்
கண்ணகி காலமும் படித்து விட்டேன்
இப்போது கனவுகளில்
உனக்கு கணவனாகும் காலம்
பற்றிய குறிப்பு சேகரித்துக் கொண்டிருக்கின்றேன் !
♥
நீ மஞ்சள் பூசிய நாளிலிருந்து
மற்ற கிழங்குகள் அனைத்தும்
நிறமற்ற நோய்காக மருந்து வேண்டி
மருத்துவரிடம் தஞ்சம் புகுந்துள்ளன !
♥
மாத விளக்கு பூசையில்
மின்சாரம் தொடர்பு துண்டித்துபோக
விளக்கொளியில் ஒரு நிமிடம் திகைத்து போனேனடி
அம்மனே அமர்ந்திருப்பது போல நீ !
♥
நான் வேட்டி கட்ட பழகி தந்தேன்
பயத்தில் எனை கட்டிக்கொள்ள
யார் பழகி தந்தார்களோ
இது அன்னிச்சை செயலென ஆய்வுகள் கருதுகின்றன !
♥
05 June, 2013
மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 8

♥
எனது கவிதையில் ஏற்படும்
வானிலை மாற்றங்கள் அத்தனைக்கும்
உனது பெயரையே எனது பேனா முன்மொழிகின்றது !
♥
காலையில் நீ கோவில் செல்லும் வழி
தெருக்கள் அனைத்திலும் காற்றின் முனுமுனுப்புகள்
காதோரம் களைப்பாரிட கண்டேன்
தென்றலினை தழுவி செல்லும் தென்றல் நீயென !
♥
மொட்டுகள் பிறந்து விரிந்து
உனது கூந்தல் விட்டு விலகும் சோகத்தில் வாடி
காவி நிறம் அணிந்ததை கண்டேன்
வினவிய போது மொட்டுகள் மனம் திறக்கும் இடம்
உனது தலைமுடி என குறிப்பு கிடைத்தது !
♥
மழித்தலில் ஆர்வம் இல்லையடி என்றேன்
உச்சி வெயிலென கூட பாராமல்
எனது கண்ணங்களை பதம் பார்த்தது
உனது அப்பாவின் முகம் துடைக்கும் கத்தி !
♥
நீ வளையல் களையும் வேளையில்
மணிக்கட்டிடம் வேண்டுகிறது வளையல்
வழிவிடாதே என்றும்
வளைந்து கொடுக்காதே என்றும் !
♥
முத்துமணி வைத்த காதணி அணிவது
நீயாக மட்டும்தான் இருக்கும்
எனது பெயர் கொண்ட அணிகலன்கள் அணிவதென
காதல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளாயாமே !
♥
உனது விழிகளிரண்டும்
கவிதையாக பிறந்தவை என்பதை
மெய்ப்பிப்பது போல அவ்வப்போது
குறிப்பிட முடியாத சில அலைவரிசை எண்ணில்
எனது விழிகளோடு ஆரவாரம் செய்யும் !
♥
பேராரவாரத்துடன் காத்திருந்தோம்
மாலை நான்கு மணி வரை
நானும் உனது வீட்டு நாய் குட்டியும்
வந்ததும் நல்ல துணையோடு காத்திருகிறாய் என்றாய்
இல்லையடி நல்ல துணைக்காக காத்திருக்கிறேன் என்றேன் !
♥
அடுத்த தெரு அங்காடிக்கு அவசரமாய் வாவென்று
குறுஞ்செய்தியி அனுப்பியிருந்தாய்
பதபதைத்து வர ஊரெங்கும் விற்காத
உனக்கு பிடித்த தேன் மிட்டாய் இங்கு கிடைக்குமென்றாய் !
♥
நாகரிகம் கலந்த இன்றைய சூழலிலும்
என்னை பெயர் சொல்லி அழைக்க மறுத்து
பண்பாடு மறவாது பகுத்தறிந்து பேசிடும்
புதுமையே நீ தமிழ் பதுமை என்பதில் ஐயமில்லை !
♥
04 June, 2013
மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 7
♥
உனது பெயரை சொல்லும்
மண் சிலை ஒன்றினை
எனது வீட்டு அலமாரியில் குடியிருத்திருக்கிறேன்
அடுக்களை வரை உனது குடியுரிமை
பெறும் வரையில் இருந்துவிட்டு போகட்டுமே !
♥
காற்றாடி கண்டுபிடித்தவன் நானாகியிருந்தால்
உனது காதோர தலைமுடியின்
முதல் விதி என்று பதிவு செய்திருப்பேன் !
♥
நான் படிக்கும்
இரண்டு பக்க நாளிதழ் நீயடி !
முதல் பக்கத்தினையே இன்னும்
எழுத்துக்கூட்டி வாசித்து கொண்டிருக்கிறேன் !
♥
வாரத்தின் மலர் என்பதை
என்னால் ஏற்க முடியவில்லை
வானத்தின் மலர் என்பதே
சரியான கூற்று ஆகும் !
♥
மலரின் மென்மையினை
உன் விரல் பிடித்து
இடுப்பளவு வளர்ந்திருந்த
பருத்திகிடையே நடந்த போது
சற்று முன் வெடித்த இளவம் பஞ்சின்
இனம் சொன்னதடி எனக்கு !
♥
மீன்களுக்கு அன்னமிடும்
கயல்மீன் விழியாளை கண்ட
கொக்குகள் அனைத்தும் நீரின் மேல்
ஒற்றை காலில் தவம் கிடக்கின்றனவாம் !
♥
இரண்டு அடிகளில் உனக்காக
எழுத முயன்று தோற்கிறேனடி
வள்ளுவனே மனைவிக்கு
நான்கு அடிகளில்தான் எழுதியிருக்கிறார் !
♥
உனது இமைகளுக்கான கர்வம்
எனது பேனாவுக்கும் வந்திருப்பதாக தெரிகிறது
அதிகமாக உனது விழிகளை பற்றியே
ஆராய்ந்து கொண்டிருப்பதால் !
♥
நான் வெறுத்த மீன் உணவை
நீ நிறுத்தியது அறிந்து
மீன்கள் நீர் துறந்து உண்ணாவிரதம் இருக்க
அனைத்துவகை மீன்கள் சங்கமும்
அறிவிப்பு வெளியிட்டுள்ளது !
♥
உனை பார்த்ததுமே
காதல் சுரப்பிகள் அனைத்தும்
அன்னிச்சை செயலென
ஆதரவு கொடி தூக்கி
காதல் அணுக்களுக்கு எல்லாம்
ஆயுதம் விநியோகம் செய்கின்றது !
♥
30 December, 2012
மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 6
♥
எங்கிருந்து கற்றுக்கொண்டனவோ
உன் விழிகள் வெட்கத்தினை
என்னை வெட்கப்படவைப்பதில்
மருத்துவப்பட்டம் பெற்றுவிட்டது !
♥
வீட்டை விட்டு கிளம்பும்போது
ஐம்பது அடி இடைவெளி
ஐயர் தெரு வரும்போது
ஐந்து அடி இடைவெளி
கோவில் வாசலில்
காலணிகளை ஒன்றாக கழற்றி வைக்கின்றோம்
கடவுளே காதல் கோட்பாட்டினை
கற்று விட்டேன் நானும் !
♥
உனது கண்ணக்குளியில்
சேமித்து வைத்திருக்கும் நமது காதலை
உனது அண்ணன் வீட்டு
மாமரத்தில் இருக்கும் தேனீக்கள் திருடி செல்ல
வரைபடம் கொண்டு ஆலோசனை செய்து வருகிறதாம் !
♥
என்னை கண்டதும் மறைந்து நிற்கையில்
உனது வெட்கத்தின் சாரலில்
எனது இதயத்தின் பரப்பளவு நனைந்து கிடக்கிறது !
♥
பரிணாம வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு
நமது காதல் போதுமே..நாம் எனும்
சொ(செ)ல் கொண்டு தொடங்கியது !
♥
உனது விழிகளை பற்றி எழுவதனால்
கருவம் கொண்டு எனது பேனா
வேறெதுவும் எழுதிடாமல் பேனாவோடு
அணிசேராமல் அமைதி காக்கிறது !
♥
காதலினை உட்கொண்டு
புன்னகைக்கும் உன் இதழ்களுக்கு
வியர்வையின் கோட்பாடு தெரியாமலிருக்கலாம்
ஆனால் தேனின் மூலக்கூறு வாய்பாடு தெரியும்போல..!
♥
எனக்கான கவிதை வடிப்பில்
ஆழ்ந்து நீ சிந்திக்கும் போது
கவனிப்பின்றி கிடந்த காகிதங்கள்
காற்றினோடு சண்டையிட்டு
உன் முன்னால் மண்டியிட்டு கிடக்கின்றன !
♥
எனது சொக்காப்பை நண்பனை
இரு விரல்களுக்கிடையே நிறுத்தி
ஒரு விரல் கொண்டு அழுத்தி
அழகாக கிறுக்குகிறாய் மௌனத்தினை
மற்ற ஏழு விரல்களின் அனல் கொண்ட பார்வையினை
தாங்கமுடியவில்லை பேனா மையது
விரைவு தந்தியினை அனுப்பியிருக்கிறது !
♥
சற்று முன் இறந்த
உனது உதட்டு சொற்கள் அனைத்தினையும்
காற்று குறிப்பு எடுத்து சென்றுள்ளது
காற்றின் ஆண்டுவிழாவில்
வெளியிடப்பட இருக்கும் வரலாற்று நாவலில்
அட்டைபடம் உனக்கென ஒதுக்கப்பட்டுள்ளதாம்
சிறப்பு விருந்தினராக எனக்கும் அழைப்பு உண்டு !
♥
ஆசையாய் உனக்கென கரையாளர் தோப்பில்
மாங்காய் திருடிவந்தேன்
பத்திரமய் அரிசி பானைக்குள் வைத்துவிட்டாய்
முறைத்து பார்த்தோம் நானும் மாங்காவும்
பாதி கடித்து நீ தருவாய் என எதிர்பார்த்திருந்தோம் !
♥
எங்கிருந்து கற்றுக்கொண்டனவோ
உன் விழிகள் வெட்கத்தினை
என்னை வெட்கப்படவைப்பதில்
மருத்துவப்பட்டம் பெற்றுவிட்டது !
♥
வீட்டை விட்டு கிளம்பும்போது
ஐம்பது அடி இடைவெளி
ஐயர் தெரு வரும்போது
ஐந்து அடி இடைவெளி
கோவில் வாசலில்
காலணிகளை ஒன்றாக கழற்றி வைக்கின்றோம்
கடவுளே காதல் கோட்பாட்டினை
கற்று விட்டேன் நானும் !
♥
உனது கண்ணக்குளியில்
சேமித்து வைத்திருக்கும் நமது காதலை
உனது அண்ணன் வீட்டு
மாமரத்தில் இருக்கும் தேனீக்கள் திருடி செல்ல
வரைபடம் கொண்டு ஆலோசனை செய்து வருகிறதாம் !
♥
என்னை கண்டதும் மறைந்து நிற்கையில்
உனது வெட்கத்தின் சாரலில்
எனது இதயத்தின் பரப்பளவு நனைந்து கிடக்கிறது !
♥
பரிணாம வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு
நமது காதல் போதுமே..நாம் எனும்
சொ(செ)ல் கொண்டு தொடங்கியது !
♥
உனது விழிகளை பற்றி எழுவதனால்
கருவம் கொண்டு எனது பேனா
வேறெதுவும் எழுதிடாமல் பேனாவோடு
அணிசேராமல் அமைதி காக்கிறது !
♥
காதலினை உட்கொண்டு
புன்னகைக்கும் உன் இதழ்களுக்கு
வியர்வையின் கோட்பாடு தெரியாமலிருக்கலாம்
ஆனால் தேனின் மூலக்கூறு வாய்பாடு தெரியும்போல..!
♥
எனக்கான கவிதை வடிப்பில்
ஆழ்ந்து நீ சிந்திக்கும் போது
கவனிப்பின்றி கிடந்த காகிதங்கள்
காற்றினோடு சண்டையிட்டு
உன் முன்னால் மண்டியிட்டு கிடக்கின்றன !
♥
எனது சொக்காப்பை நண்பனை
இரு விரல்களுக்கிடையே நிறுத்தி
ஒரு விரல் கொண்டு அழுத்தி
அழகாக கிறுக்குகிறாய் மௌனத்தினை
மற்ற ஏழு விரல்களின் அனல் கொண்ட பார்வையினை
தாங்கமுடியவில்லை பேனா மையது
விரைவு தந்தியினை அனுப்பியிருக்கிறது !
♥
சற்று முன் இறந்த
உனது உதட்டு சொற்கள் அனைத்தினையும்
காற்று குறிப்பு எடுத்து சென்றுள்ளது
காற்றின் ஆண்டுவிழாவில்
வெளியிடப்பட இருக்கும் வரலாற்று நாவலில்
அட்டைபடம் உனக்கென ஒதுக்கப்பட்டுள்ளதாம்
சிறப்பு விருந்தினராக எனக்கும் அழைப்பு உண்டு !
♥
ஆசையாய் உனக்கென கரையாளர் தோப்பில்
மாங்காய் திருடிவந்தேன்
பத்திரமய் அரிசி பானைக்குள் வைத்துவிட்டாய்
முறைத்து பார்த்தோம் நானும் மாங்காவும்
பாதி கடித்து நீ தருவாய் என எதிர்பார்த்திருந்தோம் !
♥
29 December, 2012
மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 5
♥
மொட்டை மாடியில் மெழுகுவர்த்தி ஒளியில்
காதல் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும்
அமைத்து கொடுத்த மின்சார வாரியத்திற்க்கு
விழா கமிட்டியாளர்கள் சார்பாக
மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்களாமே !
♥
கோவிலில் சர்க்கரை பொங்கள்
ஊட்டிய போது மாட்டிக்கொண்டோம்
ஊர் ஐக்கிய சங்க தலைவரிடம்
குழந்தை வேண்டி பாயாசம் போடுடா
எல்லாம் நல்லாவரும் வாழ்த்தி போனபோதுதான்
பொங்கலின் இனிப்பு தித்தித்தது..தேனாய் !
♥
படித்துக்கொண்டே நாம் படித்த பள்ளியிலே
பகுதிநேர ஆசிரியராக பணியாற்றுவதுதான் சரிதான்
மாலையில் நான் அமர்ந்து போசும்
மர நிழலில் காற்றினோடு கவிதை பாடுகிறாயாமே
தென்றலின் அண்மைச் செய்திகுறிப்பு இது !
♥
உனக்கான கவிதை தொகுப்புகளோடு
பல ஆயிரம் அடி உயரம் பறந்து
சில ஆயிரம் மைல் கடந்து வந்தாலும்
உனது விழியினில் எனை கண்டதும் வரும் முதல் துளிக்கு
என்னால் எதுவுமே செய்ய முடிவதில்லை அது ஏனோ !
♥
ஓடி வந்து சுற்றி பார்த்துவிட்டு
அருகினில் அமர்ந்து எனது தோளில்
சாய்ந்து கொண்டு கேட்பாய் எப்படி இருக்க..
பதினோறு மாதங்களுக்குபின் சுவாசம் பெறுகின்றேன்
மலரே நீ உதிர்த்த சுவாசத்தினால் !
♥
நீ கற்ற வேதியியலை
அடுக்களையில் முயற்ச்சிக்காதே
பாவம் மாமாவுக்கு
உப்பு காரம் அதிகம் ஆகாது !
♥
நான் வாங்கி வந்த
மலர் செடிகள் எதுவுமே பூக்கவில்லை
பூவே உனை கண்டபின்
நமக்கு இங்கு இடம் இல்லையென
பூக்களின் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதாம் !
♥
உனது சிங்கப்பல்லின்
சிநேகம் பிடிக்குமாம்
எனது வீட்டில் காய்த்த கொய்யாப்பழத்திற்க்கு !
♥
உனக்காய் நான் வாங்கிய
கண்ணாடி வளையல்களை
ஆசையோடு அத்தைமகள் கேட்கிறாள் என
அம்மாவோடு அத்தையும் வாங்கி கொடுக்க
வாங்கியதோடு கை முழுவதும்
அடுக்கிவைத்து ஆட்டிகாட்டிட
அருள் கந்தனுக்கு வந்ததோ இல்லையோ
தாவணி கட்டிய கன்னி தமிழச்சிக்கு வந்தது !
♥
அத்தை மகளுக்கு கொடுத்த வளையயெல்லாம்
கூட்டத்தில் உடைந்து விட்டாதாம்
உனது கோபம் உன்னுடைய தங்கை வடிவில்
அவதாரம் எடுப்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை !
♥
மொட்டை மாடியில் மெழுகுவர்த்தி ஒளியில்
காதல் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும்
அமைத்து கொடுத்த மின்சார வாரியத்திற்க்கு
விழா கமிட்டியாளர்கள் சார்பாக
மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்களாமே !
♥
கோவிலில் சர்க்கரை பொங்கள்
ஊட்டிய போது மாட்டிக்கொண்டோம்
ஊர் ஐக்கிய சங்க தலைவரிடம்
குழந்தை வேண்டி பாயாசம் போடுடா
எல்லாம் நல்லாவரும் வாழ்த்தி போனபோதுதான்
பொங்கலின் இனிப்பு தித்தித்தது..தேனாய் !
♥
படித்துக்கொண்டே நாம் படித்த பள்ளியிலே
பகுதிநேர ஆசிரியராக பணியாற்றுவதுதான் சரிதான்
மாலையில் நான் அமர்ந்து போசும்
மர நிழலில் காற்றினோடு கவிதை பாடுகிறாயாமே
தென்றலின் அண்மைச் செய்திகுறிப்பு இது !
♥
உனக்கான கவிதை தொகுப்புகளோடு
பல ஆயிரம் அடி உயரம் பறந்து
சில ஆயிரம் மைல் கடந்து வந்தாலும்
உனது விழியினில் எனை கண்டதும் வரும் முதல் துளிக்கு
என்னால் எதுவுமே செய்ய முடிவதில்லை அது ஏனோ !
♥
ஓடி வந்து சுற்றி பார்த்துவிட்டு
அருகினில் அமர்ந்து எனது தோளில்
சாய்ந்து கொண்டு கேட்பாய் எப்படி இருக்க..
பதினோறு மாதங்களுக்குபின் சுவாசம் பெறுகின்றேன்
மலரே நீ உதிர்த்த சுவாசத்தினால் !
♥
நீ கற்ற வேதியியலை
அடுக்களையில் முயற்ச்சிக்காதே
பாவம் மாமாவுக்கு
உப்பு காரம் அதிகம் ஆகாது !
♥
நான் வாங்கி வந்த
மலர் செடிகள் எதுவுமே பூக்கவில்லை
பூவே உனை கண்டபின்
நமக்கு இங்கு இடம் இல்லையென
பூக்களின் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதாம் !
♥
உனது சிங்கப்பல்லின்
சிநேகம் பிடிக்குமாம்
எனது வீட்டில் காய்த்த கொய்யாப்பழத்திற்க்கு !
♥
உனக்காய் நான் வாங்கிய
கண்ணாடி வளையல்களை
ஆசையோடு அத்தைமகள் கேட்கிறாள் என
அம்மாவோடு அத்தையும் வாங்கி கொடுக்க
வாங்கியதோடு கை முழுவதும்
அடுக்கிவைத்து ஆட்டிகாட்டிட
அருள் கந்தனுக்கு வந்ததோ இல்லையோ
தாவணி கட்டிய கன்னி தமிழச்சிக்கு வந்தது !
♥
அத்தை மகளுக்கு கொடுத்த வளையயெல்லாம்
கூட்டத்தில் உடைந்து விட்டாதாம்
உனது கோபம் உன்னுடைய தங்கை வடிவில்
அவதாரம் எடுப்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை !
♥
28 December, 2012
மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 4
♥
உனது வீட்டில் மட்டுமேன்
செல்லப்பிராணிகளே இல்லை என்றேன்
செல்லமே உன்னை தவிர யாரும் இல்லை
என்னோடு மௌனமாய் பேசிட என்கிறாய் !
♥
நூலகத்தில் புத்தகம் எல்லாம்
வெளிநடப்பு செய்துவிட்டனவாம்
எனை கண்ட ஆவலில்
உனை நீ மறந்திருக்க
பாவம் புத்தகம் என்ன செய்யும் !
♥
இப்போதும் குளத்துக்கரையில்
மிதிவண்டியில் முன் கம்பியில்
என்னோடு அமர்ந்து வருபவள்
நீயாக மட்டும்தான் இருக்கும் !
♥
காதலிப்பவர்கள்
கடற்கரை செல்வது அழகு என்கிறார்கள்
தண்ணீரே இல்லாவிட்டாலும்
குளந்தங்கரைதானடி அழகே அழகு நமக்கு !
♥
தலை நிறைய மல்லிகை வேண்டும் என்றாய்
வாங்கி வந்தேன் யாருக்கும் தெரியாமல்
உனது கையால் அல்ல
அத்தையின் அரவனைக்கும் கைகளால் என்கிறாய்
பூக்களும் உன் மீது காதல் கொள்ளும் பூவே !
♥
திருவிழாவிற்க்கு வாங்கி தந்த
பலூனில் காற்று வெள்யேறாமல் இருக்க
... 144 தடைச்சட்டம் போட்டிருக்கிறாயாமே !
உனது சுவாசத்தில் தானே
நானே வாழ்கின்றேன் பாவம்
பலூனை விடுதலை செய்ய அனுமதிக்கொடு
♥
ஊருக்கு வந்த ஆறாம் நாள்
சோகத்தின் உச்சியில் உனது முகம்
கடல் கடக்க இருபத்திநான்கு நாட்கள்
மட்டுமே என்றெண்ணி..
உன்னோடு இருபத்திநான்கு மணி நேரமாவது
வாழ ஓடிக்கொண்டிருக்கின்றேன்
நாடு விட்டு நாடு..கடல் தாண்டி !
♥
ஏழு நாட்களும் இரவனில் வரும் சப்ரத்திற்க்கு
நமது தெருவில் எழுந்து வணங்குவது
நமது பாட்டிகளும் நாமும்தான்
பக்தி முத்துவது இதுதான் போல !
♥
தீபாவளிக்கு வழக்கமே இல்லாமல்
நாம் வேட்டி சேலை கட்டியது
பூக்கள் தொடுத்து
பார்பானை அழைக்க
அனைத்து இளைஞர் சங்கமும் அழைப்பு விடுத்துள்ளன !
♥
மருமகனே !
நாளைக்கு நூறுமுறை அழைக்கும்
தந்தையிடம் சொல் சீதனமாக
உனக்கு ஊட்டிய பால் சங்கு வேண்டுமென்று !
♥
உனது வீட்டில் மட்டுமேன்
செல்லப்பிராணிகளே இல்லை என்றேன்
செல்லமே உன்னை தவிர யாரும் இல்லை
என்னோடு மௌனமாய் பேசிட என்கிறாய் !
♥
நூலகத்தில் புத்தகம் எல்லாம்
வெளிநடப்பு செய்துவிட்டனவாம்
எனை கண்ட ஆவலில்
உனை நீ மறந்திருக்க
பாவம் புத்தகம் என்ன செய்யும் !
♥
இப்போதும் குளத்துக்கரையில்
மிதிவண்டியில் முன் கம்பியில்
என்னோடு அமர்ந்து வருபவள்
நீயாக மட்டும்தான் இருக்கும் !
♥
காதலிப்பவர்கள்
கடற்கரை செல்வது அழகு என்கிறார்கள்
தண்ணீரே இல்லாவிட்டாலும்
குளந்தங்கரைதானடி அழகே அழகு நமக்கு !
♥
தலை நிறைய மல்லிகை வேண்டும் என்றாய்
வாங்கி வந்தேன் யாருக்கும் தெரியாமல்
உனது கையால் அல்ல
அத்தையின் அரவனைக்கும் கைகளால் என்கிறாய்
பூக்களும் உன் மீது காதல் கொள்ளும் பூவே !
♥
திருவிழாவிற்க்கு வாங்கி தந்த
பலூனில் காற்று வெள்யேறாமல் இருக்க
... 144 தடைச்சட்டம் போட்டிருக்கிறாயாமே !
உனது சுவாசத்தில் தானே
நானே வாழ்கின்றேன் பாவம்
பலூனை விடுதலை செய்ய அனுமதிக்கொடு
♥
ஊருக்கு வந்த ஆறாம் நாள்
சோகத்தின் உச்சியில் உனது முகம்
கடல் கடக்க இருபத்திநான்கு நாட்கள்
மட்டுமே என்றெண்ணி..
உன்னோடு இருபத்திநான்கு மணி நேரமாவது
வாழ ஓடிக்கொண்டிருக்கின்றேன்
நாடு விட்டு நாடு..கடல் தாண்டி !
♥
ஏழு நாட்களும் இரவனில் வரும் சப்ரத்திற்க்கு
நமது தெருவில் எழுந்து வணங்குவது
நமது பாட்டிகளும் நாமும்தான்
பக்தி முத்துவது இதுதான் போல !
♥
தீபாவளிக்கு வழக்கமே இல்லாமல்
நாம் வேட்டி சேலை கட்டியது
பூக்கள் தொடுத்து
பார்பானை அழைக்க
அனைத்து இளைஞர் சங்கமும் அழைப்பு விடுத்துள்ளன !
♥
மருமகனே !
நாளைக்கு நூறுமுறை அழைக்கும்
தந்தையிடம் சொல் சீதனமாக
உனக்கு ஊட்டிய பால் சங்கு வேண்டுமென்று !
♥
27 December, 2012
மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 3
♥
அனைத்துவகை மிட்டாய்களையும்
ஊருக்கே வாங்கி வருகிறேன்
எனக்காய் உள்ளங்கையில் ஒளித்து வைத்திருக்கும்
ஆரஞ்சுமிட்டாய் போதும் எனக்கு !
♥
நீ துணி காயப்போட வரும் நேரத்திற்க்காக
நான் பசுமை புரட்சியாளனாக மாறிவிட்டேன்
மச்சு முழுவதும் உன் அழகை மெச்சும்
செடிகள் வளர்கின்றேன் !
♥
அடுத்து என்ன பட்டம் வேண்டி
படிக்க போகிறாய் என்றேன்
மாலை அணிவித்து நீ தரும்
திருமதி பட்டம் என்றாய்
நானும் வெட்கம் கொண்ட நேரமது !
♥
அம்மா வைக்கும் புளிக்குழம்பு போல
உன் விரலில் வரிசையாய் மாட்டி தின்னும்
அப்பளப்பூவும் எனக்கு பிடித்த உணவாய்போனது !
♥
ஐந்து வயதில் ஆலமரத்தில்
ஊஞ்சல் கட்டியது நினைவிருக்கிறது என்றேன்
அவசரப்படாதே தொட்டில் கட்ட
மாதங்கள் உண்டு தள்ளியே இரு என்கிறாய் !
♥
தேர்வுக்கு முதல் நாள் அம்மாவிடம்
ஆசி வாங்க வருவாய்
எல்லாவற்றிலும் நீ தேர்ச்சி பெறுவாய்
அம்மா வேறெதுவும் அர்த்தமின்றி
உன்னை வாழ்த்துவதுண்டு !
நீ படிக்க பணம் தடையானது
அவள் படிக்க நீ தடையாகி விடக்கூடாதென்று
என்னோடு கோபத்தில் கூறுவதாய்
முகபாவனை செய்வதுண்டு
என்னதான் இருந்தாலும் அம்மா அம்மாதான் !
♥
தேர்வு எழுதுகிறோம்
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நீயும்
வருடத்திற்க்கு ஒருமுறை நானும் !
நீ வெற்றி பெறுவது ஊரறிந்த உண்மை
நான் வெற்றி பெறுவது உன் தந்தைக்கு
மட்டுமே தெரிந்த உண்மை !
♥
எத்தனை தீபாவளிதான்
தாவணியில் தரிசிக்க என்பேன்
நாளையே மாலையிடு
பொங்களுக்கு பட்டுகட்டி
காட்சி தருகிறேன் என்கிறாய்
தாவணி தேவதை சேலைகட்டி
என் முற்றத்தில் பொங்கலிட
உனக்கு போட்டியாய் என்னை துரத்தியவர்கள்
பெரும் மூச்சுவிட கண் விழிக்கும் கதிரவன்
என்னோடு கண் சிமிட்டுகிறான்
நேற்றைய கனவது..!
♥
நான் வாங்கிவரும் சேலையினை
கட்டிவிட்டு திரும்ப தருகிறாய்
முத்தங்களை மட்டும்
வீட்டுக்கு எடுத்துச் செல்கிறாய் !
♥
முப்பதே நாட்களில் காதல்மொழி பேசலாம்
எனது விடுமுறை குறித்து
ஊர் தண்ணீர் தொட்டியில்
நண்பன் எழுதிய வாசகம் !
♥
அனைத்துவகை மிட்டாய்களையும்
ஊருக்கே வாங்கி வருகிறேன்
எனக்காய் உள்ளங்கையில் ஒளித்து வைத்திருக்கும்
ஆரஞ்சுமிட்டாய் போதும் எனக்கு !
♥
நீ துணி காயப்போட வரும் நேரத்திற்க்காக
நான் பசுமை புரட்சியாளனாக மாறிவிட்டேன்
மச்சு முழுவதும் உன் அழகை மெச்சும்
செடிகள் வளர்கின்றேன் !
♥
அடுத்து என்ன பட்டம் வேண்டி
படிக்க போகிறாய் என்றேன்
மாலை அணிவித்து நீ தரும்
திருமதி பட்டம் என்றாய்
நானும் வெட்கம் கொண்ட நேரமது !
♥
அம்மா வைக்கும் புளிக்குழம்பு போல
உன் விரலில் வரிசையாய் மாட்டி தின்னும்
அப்பளப்பூவும் எனக்கு பிடித்த உணவாய்போனது !
♥
ஐந்து வயதில் ஆலமரத்தில்
ஊஞ்சல் கட்டியது நினைவிருக்கிறது என்றேன்
அவசரப்படாதே தொட்டில் கட்ட
மாதங்கள் உண்டு தள்ளியே இரு என்கிறாய் !
♥
தேர்வுக்கு முதல் நாள் அம்மாவிடம்
ஆசி வாங்க வருவாய்
எல்லாவற்றிலும் நீ தேர்ச்சி பெறுவாய்
அம்மா வேறெதுவும் அர்த்தமின்றி
உன்னை வாழ்த்துவதுண்டு !
நீ படிக்க பணம் தடையானது
அவள் படிக்க நீ தடையாகி விடக்கூடாதென்று
என்னோடு கோபத்தில் கூறுவதாய்
முகபாவனை செய்வதுண்டு
என்னதான் இருந்தாலும் அம்மா அம்மாதான் !
♥
தேர்வு எழுதுகிறோம்
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நீயும்
வருடத்திற்க்கு ஒருமுறை நானும் !
நீ வெற்றி பெறுவது ஊரறிந்த உண்மை
நான் வெற்றி பெறுவது உன் தந்தைக்கு
மட்டுமே தெரிந்த உண்மை !
♥
எத்தனை தீபாவளிதான்
தாவணியில் தரிசிக்க என்பேன்
நாளையே மாலையிடு
பொங்களுக்கு பட்டுகட்டி
காட்சி தருகிறேன் என்கிறாய்
தாவணி தேவதை சேலைகட்டி
என் முற்றத்தில் பொங்கலிட
உனக்கு போட்டியாய் என்னை துரத்தியவர்கள்
பெரும் மூச்சுவிட கண் விழிக்கும் கதிரவன்
என்னோடு கண் சிமிட்டுகிறான்
நேற்றைய கனவது..!
♥
நான் வாங்கிவரும் சேலையினை
கட்டிவிட்டு திரும்ப தருகிறாய்
முத்தங்களை மட்டும்
வீட்டுக்கு எடுத்துச் செல்கிறாய் !
♥
முப்பதே நாட்களில் காதல்மொழி பேசலாம்
எனது விடுமுறை குறித்து
ஊர் தண்ணீர் தொட்டியில்
நண்பன் எழுதிய வாசகம் !
♥
26 December, 2012
மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 2
♥
அடுத்த வாரம் மாமன் மகன்
வருவதாக பொய் கூறுவாய்
கடந்த வாரம் அத்தைமகள் வந்தால்
என்ற உண்மையை வரவழைக்க !
♥
ராட்டினத்தில்
உன்னோடு சுற்றியபின்புதான்
புவியியல் புரிந்தது
பூமி கோளம் என்று !
♥
திருவிழா பட்டாசு வெடிக்கும் நேரத்தில்
என் பின்னே ஒளிந்து கொள்வாய்
பயல் அல்ல...
பட்டாசு அனைத்தும் உனை கண்டுபின்
பதத்துவிடும் என்பதனால்தான் !
♥
தேர் வடம் பிடித்து இழுக்க
தம்பதியினரை அழைக்கும்போது
முந்தி சென்று வடம் பிடித்தது நாமாகத்தான் இருக்கும்
மஞ்சள் கயிறு கட்டும் முன்னே தம்பதியரானோம் !
♥
வீட்டருகே தேர் வந்தால்
அடுத்து வந்து நின்று கொள்வாய்
முதலில் குடும்ப புகைப்படத்திலும்
அடுத்ததாய் குடும்பத்திலும்
இடம் பெறும் குறிப்பு அறிந்து !
♥
நான் ஊருக்கு வருவதை
வானவில்லின் வர்ணமாகிய
உன் வீட்டு கோலம் சொல்லுமடி ஊருக்கு !
♥
நீ புள்ளி வைப்பது என்னவோ
உன் வீட்டு முற்றத்தில்தான்
கோலமிடுவதோ என்வீட்டு
துளசி மாடத்தில்தான் !
♥
நீ பாதி நான் பாதி
கடித்து துப்பிய வேப்பம்பழம்
அழகாய் வளர்ந்து மஞ்சளுடுத்தி
ஊருக்கே காவல் தெய்வமாகிபோனது !
♥
அமீரகத்திலிருந்தும்
கண்ணாடி வலையல் கேட்கும்
தேவதை நீ மட்டும்தானடி !
♥
மொட்டைமாடியில் படுத்துகொண்டு
விமானத்திடம் நீ சொல்லும் சேதி அனைத்தும்
பத்திரமாய் குறித்து வைத்திருக்கிறேன் !
♥
25 December, 2012
மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 1
♥
விடல் சிதறல் தேங்காவும்
வித்தியாசமாக பார்க்கின்றன
என் நெற்றில் திருநிறு இட்டு
கைகள் கண்கள் மூடி
உன் சுவாசத்தின் சுழற்சி முறைக்கு பின்பு !
♥
நீ கண்கள் மூடி வேண்டும் வேளையில்தான்
கற்சிலைகள் அனைத்தும் கண்கள் திறந்து
வேண்டுதல் ஏற்கின்றன !
♥
எல்லோருக்கும் கையில் பிரசாதம்
உனக்கு மட்டும் காகிதத்தில்
உதிரம் கொண்டு உதிர்த்த மடலது !
♥
அடிமேல் அடிவைத்து
பாதம் நகர்த்தி வேண்டுதலின் போது
எறும்புகள் பாதையில் சிவப்பு விளக்கிட்டு
சிறப்பு தரிசனம் வேண்டுகிறது !
♥
வாரத்தின் ஏழும் வெள்ளியாகி விடக்கூடாதா
என் குலச்சாமியே !
உன்னை கோவிலில் தரிசிக்க
♥
நீ சனீஸ்வரனை வேண்டும் போது
உனது அண்ணனும்
விநாயகனை வேண்டும் போது
எனது அண்ணனும்
நினைவுக்கு வருவதாக கூறும்போது
கோபம் கொள்வாய்
நான் இரண்டாவது அத்யாயம் தொடங்கிவிடுவேன் என்று
♥
தீபத்தினை தொட்டு மூன்று முறை
கண்களில் ஒத்திக்கொள்கிறாய்
என்னோடு நடக்கும்போது மட்டும்
மூன்று அடி இடம் பெயருகிறாய் !
♥
நீ கட்டி எடுத்து வரும்
மாலைக்காகதான் காத்திருக்கிறோம்
நானும் கடவுளும் !
♥
அவ்வப்போது அண்ணனோடு
அருள்தரும் வேளையில்
கட்டைவிரல் திரும்பி நின்று
மணலில் புதைந்து கொள்கிறது
காவலனை கண்ட கள்வனை போல
பின்னே...
மகாலெட்சுமியை கடத்த வந்தால்
கையில் எடுத்தா கொடுப்பார்கள்
என்கிறாள் உன் தங்கை !
♥
உன்னைவிட உன் தங்கையே அழகு என்பேன்
அப்போ அவளையோ கட்டிக்கோ
என்று முகம் சுழிப்பாய்
முகம் மாற்ற முயலுவதாய்
மீண்டும் கோபமுறச் செய்வேன்
அவளையும் சேர்த்து கட்டிகொள்வதாய் கூறி !
♥
Subscribe to:
Posts (Atom)





